பக்கம் எண் :

 மகரக் கண்ணன் வதைப் படலம் 467

ஒடித்து   தேர்ப்பாகனது   தலையையும்   பூமியில்   விழும்படியாகச்
செய்தான்.
 

                                                 (22)
 

      மகரக் கண்ணன் தவ வலிமையால் இடியும் காற்றும் விளைத்தல்
 

8424.மார்பிடை நின்ற வாளிவாயிடை வெயிலின் வாரும்
சோரியன், விசும்பினூடு ஓர் இமைப்பிடைத்
                           தோன்றாநின்றான்,
கார் உரும்ஏறும், காற்றும், கனலியும், கடைநாள் வையம்
பேர்வுறு காலம் என்ன, பெருக்கினன், தவத்தின் பெற்றான்.

 

மார்பிடை நின்ற வாளிவாயிடை வெயிலின் வாரும் சோரியன்-
மார்பினிடத்து  (இராமனால்  எய்யப்பெற்று)  தைத்து நின்ற   அம்பின்
வாயிடத்தினின்றும்  வெயிலைப்  போலச் செந்நிறமுடையதாக  ஒழுகும்
இரத்தத்தை   ‘உடையவனாகிய   மகரக்கண்ணன்;  விசும்பினூடு  ஓர்
இமைப்பிடைத்  தோன்றா  நின்றான்
 -  ஓர் இமைப்பொழுதிற்குள்.
ஆகாயத்தினிடத்துத்   தோன்றி   நின்று;   தவத்தின் பெற்றான்  -
தவத்தினால்  சித்தி  பெற்றவனாதலின்;  கார் உரும் ஏறும், காற்றும்,
கனலியும்
 -  மேகத்தில்  பொருந்திய பேரிடியும், காற்றும் நெருப்பும்
என்ற   இவற்றை;கடைநாள் வையம்  பேர்வுறு  காலம்   என்னப்
பெருக்கினன்
  -   உலகம்   நிலை  பெயர்ந்து  அழியும்  படியான
ஊழிக்காலம் எனும்படி மிகுதியாக உண்டாக்கினான்.
 

                                                 (23)
 

                                   வானர சேனை சிதறுதல்
 

8425,உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன; ஊழி நாளின்,
இரு முறை காற்றுச் சீறி எழுந்தது; விழுந்தது, எங்கும்
கரு முறை நிறைந்த மேகம்; கான்றன, கல்லின் மாரி;
 
பொரு முறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன.

 

உரும்  முறை அனந்த கோடி உதிர்ந்தன -  (மகரக்  கண்ணனது
தவசித்தியால்) இடிகள் வரிசையாக எண்ணில்லாத கோடி