உதிர்ந்தன; ஊழிநாளின் இருமுறை காற்றுச் சீறி எழுந்தது - ஊழி நாளைக்காட்டிலும் இரு மடங்கு காற்றுச் சீறி எழுந்தது; விழுந்தது எங்கும் - எவ்விடத்தும் (உள்ள பொருள்கள் நிலைதடுமாறி) விழுந்தன;கருமுறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி - கருமைத் தன்மை நிறைந்த மேகங்கள் கல் மழை பொழிந்தன; பொருமுறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன - குரங்குகள் போர் செய்யும் தன்மையினின்றும் மயங்கிச் சுற்றிலும் நிலை கெட்டு ஓடிப்போயின. | (24) | வீடணன் தந்த செய்தி | 8426. | போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்புப் போர்ப்ப, தீஇனம் அமையச் செல்லும் மாய மா மாரி சிந்த, ஆயிர கோடி மேலும் அவிந்தன, கவிகள்; ஐயன், ‘மாயமோ? வரமோ?’ என்றான்; வீடணன் வணங்கிச் சொல்வான்: | கவிகள் - குரங்குகள்; போயின திசைகள் எங்கும் புகையோடு நெருப்புப் போர்ப்ப - (தாம்) ஓடிய திக்குகளிலெல்லாம் புகையும், நெருப்பும் மூடிக்கொள்ளவும்; செல்லும் தீ இனம் அமைய மாய மா மாரிசிந்த - மேகமும் நெருப்புத் தொகுதி பொருந்த பெரு மழையை அழியும்படியாகப் பொழியவும்; ஆயிரம் கோடி மேலும் அவிந்தன - (அதனால்) ஆயிரம் கோடிக்கும் மிகுதியாக மடிந்தன; ஐயன், ‘மாயமோ? வரமோ?’ என்றான் - (அதனைக் கண்ட) இராமன் (வீடணனை நோக்கி) ‘இது மாயத்தினால் நிகழ்ந்ததா? (அல்லது) வரத்தின் பயனால் உண்டானதா?’ என்று கேட்டான்; வீடணன் வணங்கிச் சொல்வான் - (அதைக் கேட்ட) வீடணன் வணங்கிப் பின்வருமாறு கூறலானான். | (25) | 8427. | ‘நோற்றுடைத் தவத்தின் நோன்மை நோக்கினர் கருணை நோக்கி, காற்றுடைச் செல்வன்தானும், மழையுடைக் கடவுள்தானும், மாற்றலர், ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது’ என்றான்; நூற்று இதழ்க் கமலக் கண்ணன், ‘அகற்றுவென், நொடியில்’என்றான். |
|
|
|