பக்கம் எண் :

 மகரக் கண்ணன் வதைப் படலம் 469

காற்றுடைச்   செல்வன் தானும், மழையுடைக் கடவுள்தானும் -
வாயுதேவனும்,  வருணதேவனும்; நோற்றுடைத் தவத்தின் நோன்மை
நோக்கினர்
 -  (மகரக்கண்ணன்)  செய்த  தவத்தினது  வலிமையைப்
பார்த்து;    ‘மாற்றலர்’   -   (அவன்   கேட்ட   வரத்தை)  மறுக்க
முடியாதவராகி;  ஈந்த தெய்வ  வரத்தினால்  வந்தது  என்றான் -
கொடுத்த   தெய்வத்தன்மையுடைய  வரத்தினால்  இது நிகழ்ந்துள்ளது
என்றான்  (வீடணன்); நூற்று  இதழ்க்  கமலக் கண்ணன் - (அதைக்
கேட்டு)  நூறு  இதழ்களையுடைய   தாமரைப்  பூப்போலும் கண்களை
உடைய   இராமன்; ‘அகற்றுவென் நொடியின்’  என்றான்  -  ‘ஒரு
நொடிப்பொழுதில் (இவற்றைப் போக்குவேன்’ என்றான்;
 

                                                (26)
 

               இராமபிரான் மாயத்தின் விளைவுகளைப் போக்குதல்
 

8428.காலவன் படையும், தெய்வக் கடலவன் படையும் காலக்
கோல வன் சிலையில் கோத்து கொடுங் கணையோடும்
                                          கூட்டி,
மேலவன் துரத்தலோடும், விசும்பின்நின்று எரிந்து,
                                        வெய்தின்
மால் இருங் கடலின் வீழ்ந்து மறைந்தன, மழையும் காற்றும்.
 
 

காலவன்   படையும்  தெய்வக்   கடலவன் படையும் கால -
காற்றுக்கு   உரிய   தெய்வமான  வாயு  தேவனுடைய அம்பும் கடல்
தெய்வமாகிய வருணதேவனுடைய  அம்பும்   வெளிப்படும்   படியாக;
கோலவன் சிலையில்  கோத்து கொடுங்கணையோடும்  கூட்டி  -
அழகிய வலிய வில்லிலே  கோத்த    கொடிய   கணையோடுங்கூட்டி;
மேலவன்   துரத்தலோடும்   - மேன்மை  பெற்றவனாகிய இராமன்
செலுத்தியவுடன்;  மழையும்  காற்றும் விசும்பின்  நின்று எரிந்து -
(மகரக்கண்ணனால்)     ஏவப்பெற்ற   மழையும்  காற்றும்  விரைவாக
வானத்திலிருந்து எரிந்து  கொண்டு;  மால்  இருங்கடலின்  வீ்ழ்ந்து
மறைந்தன
- மிகப் பெரிய கடலிலே வீழ்ந்து அழிந்து போயின.
 

                                                (27)