மகரக் கண்ணன் மாயையால் மறைந்து போரிடுதல் |
8429. | அத் துணை, அரக்கன் நோக்கி, அந்தர வானம் எல்லாம் ஒத்தன உருவே ஆக்கி, தான் மறைந்து ஒளித்து, சூலப் பத்திகள் கோடி கோடி பரப்பினன்; அதனைப் பார்த்த வித்தகன், ‘ஒருவன் செய்யும் வினையம்!’ என்று இனைய சொன்னான். |
அத்துணை, அரக்கன் நோக்கி - அவ்வளவில், மகரக் கண்ணன் (தான் உருவாக்கிய மழையும் காற்றும் அழிந்ததைப்) பார்த்து; அந்தர வானமெல்லாம் ஒத்தன உருவே ஆக்கி - இடைவெளியாயுள்ள வானமெல்லாம் தன்னை ஒத்தனவாகிய உருவங்களை (மாயத்தால்) தோற்றுவித்து; தான் மறைந்து ஒளித்து - தன் உரு வெளிப்படாமல் மறைந்து பதுங்கி; சூலப் பத்திகள் கோடி கோடிப் பரப்பினன் - சூல வரிசைகளைக் கோடி கோடியாகப் பரப்பினான்; அதனைப் பார்த்த வித்தகன் - அதனைப் பார்த்த ஞான வடிவினனாகிய இராமன்; ‘ஒருவன் செய்யும் வினையம்’ என்று இனைய சொன்னான் - ‘ஒருவன் செய்யும் சூழ்ச்சி என்னே’ (என வியந்து) என்று இப்படியாகச் சொன்னான். |
(28) |
மகரக்கண்ணன் மடிதலும் மாயை அகல்தலும் |
8430. | ‘மாயத்தால் வகுத்தான், யாண்டும் வரம்பு இலா உருவம்; தான் எத் தேயத்தான் என்னாவண்ணம் கரந்தனன்; தெரிந்திலாதான்; காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன்; தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல்?’ எனச் சிந்தை நொந்தான். |
‘மாயத்தால் யாண்டும் வரம்பிலா உருவம் வகுத்தான்’ - (மகரக்கண்ணன்) மாயத்தினால் அளவில்லாத உருவத்தை |