| மகரக் கண்ணன் வதைப் படலம் | 471 |
எவ்விடத்தும் தோன்றும் படியாகச் செய்தான்; ‘தான் எத்தேயத்தான் என்னா வண்ணம் கரந்தனன் - ‘தான் எந்த இடத்தில் இருக்கிறான் என்று சொல்ல முடியாதபடி ஒளித்து விட்டான்; ‘தெரிந்திலாதான்’ - (அங்ஙனம்) ஒளித்துவிட்ட அவன்; ‘காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன் - உடம்பினால் இத்தன்மையான் என்று நினைக்கும்படியான நினைவுக்கு உட்பட்டவன் அல்லன்; ‘தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல்?’ - ‘தீயை ஒத்தகொடியவனாகிய அவனிடத்துச் செய்யக்கூடிய செயல் யாது?’எனச் சிந்தை நொந்தான் - என்று மனம் வருந்தினான். | (29) | 8431. | அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன்தன் அருள் இல் யாக்கை உம்பரில் பரப்பி, தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான், செம்புனல் சுவடு நோக்கி, ‘இது நெறி’ என்று, தேவர் தம்பிரான் பகழி தூண்ட, தலை அற்றுத் தலத்தன் ஆனான். | அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன் - (நான் விட்ட) அம்பு பட்ட இடத்திலிருந்து (இரத்து) ஆறு பெருகப் பெற்ற மகரக்கண்ணன்; தன் அருன் இல் யாக்கை உம்பரில் பரப்பி - அருள் இல்லமால் வளர்ந்த தன் உடம்பை ஆகாயத்தில் பலவாறாகத் தோன்றச்செய்து; தான் வேற ஒளித்தனன் என்ன ஓர்வான் - தான் (அவற்றில்) வேறாக ஒளிந்திருக்கின்றான் என்று எண்ணியவனாகி; தேவர் தம்பிரான் - தேவர்களின் தலைவனாகிய இராமன்; செம்புனல் சுவடுநோக்கி - இரத்தம் வழியும்படியான அடை யாளத்தைப் பார்தது; ‘இது நெறி’ என்று பகழி தூண்ட - இதுவே (அவனுள்ள)இடம் எனத் துணிந்து (தன்) அம்பினைச் செலுத்த; தலை அற்றுத்தலத்தன் ஆனான்- (அம்மகரக்கண்ணன்) தலை அறுபட்டுப் பூமியில் விழுந்தான். | (30) | 8432. | அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும், அரக்கன் யாக்கை, புயல் படக் குருதி வீசி, படியிடைப் புரள்தலோடும், |
|
|
|