| வெயில் கெடுத்து இருளை ஓட்டும் காலத்தின் விளைவினோடும் துயில் கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது-சூழ்ந்த மாயை. |
அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும் - கூர்மையுடைத்தாய் இடியைப் போலச் செல்லுகின்ற இராமனது அம்புடன்; அரக்கன் யாக்கை - மகரக்கண்ணனது உடல்; புயல் படக் குருதி வீசி படியிடைப் புரள்தலோடு - மேகம் மழை பொழிவது போல இரத்தத்தைப் பொழிய விட்டுப் பூமியில் விழுந்து புரண்ட அளவில்; சூழ்ந்த மாயை - (அவனால் விளைவிக்கப் பெற்றுச்) சூழ்ந்திருந்த மாயையானது; வெயில் கெடுத்து இருளை ஓட்டும் காலத்தின் விளைவினோடும் - சூரியன் இருளைக் கெடுத்து ஓட்டும்படியா விடியற்காலம் தோன்றியதும்; துயில் கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது - உறக்கம் நீங்க (அவ்வுறக்கத்திற் கண்ட) கனவு (முற்றிலும் பொய்யாய்) அழிந்து போனதை ஒத்தது. |
(31) |
குருதிக்கண்ணன், சிங்கன் வீழ்ச்சி |
8433. | குருதியின் கண்ணன், வண்ணக் கொடி நெடுந் தேரன், கோடைப் பருதியின் நடுவண் தோன்றும் பசுஞ் சுடர் மேகப் பண்பன், எரி கணை சிந்தி, காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான்- விரி கடல் தட்டான், கொல்லன், வெஞ் சினத் தச்சன், வெய்யோன். |
வண்ணக் கொடி நெடுந்தேரன் - அழகிய கொடி கட்டப் பெற்ற பெரிய தேரை உடையவனும்; கோடைப் பகுதியின் நடுவண் தோன்றும் பசுஞ்சுடர் மேகப் பண்பன் - கோடைக்காலத்துச் சூரியனிடையே தோன்றுகின்ற பசிய ஒளியை உடைய மேகத்தின்தன்மையை உடையவனும்; குருதியின் கண்ணன் - ஆகிய குருதிக்கண்ணன்; எரிகணை சிந்தி காலின் எய்தான் - நெருப்பை உமிழ்கின்ற அம்புகளை எய்துகொண்டு காற்றைப் போல விரைந்து வந்தான்; விரிகடல் தட்டான் கொல்லன் வெஞ்சினத் |