பக்கம் எண் :

 மகரக் கண்ணன் வதைப் படலம் 473

தச்சன்,  வெய்யோன் - (அவனை) பெரிய கடலைத் தடுத்து அணை
கட்டியவனும், கொல்லும் தன்மையனும், வெம்மையான  கோபத்தினால்,
அச்சமுறச்  செய்பவனும்,  (பகைவர்க்கு) கொடுமையானவனும்  ஆகிய
நளன்  (என்னும்  வானரவீரன்);  தன்னோடு ஏற்றான்  - தன்னோடு
போர் புரியுமாறு (முன்சென்று) எதிர்த்தான்.
 

இச்செய்யுளில்     தட்டான், கொல்லான், தச்சன் என்னும் சாதிப்
பெயர்கள்   அமைந்துள்ளமை   காண்க.   தட்டான்  -  தடுத்தவன்.
வெஞ்சினத்து + அச்சன் - வெஞ்சினத்தச்சன். அச்சத்தைத் தருபவன்
அச்சன்.   கடலைத்   தடுத்து   அணை   கட்டியவன்   என்பதால்
எதிர்த்தவன்   நளன்  என்பது  பெறப்பட்டது.  குருதிக்கண்ணன்  -
கோணதிக் கண்ணன்
 

                                                 (32)
 

8434.அன்று,  அவன்  நாம  வில்  நாண் அலங்கல் தோள்
                                 இலங்க வாங்கி,
ஒன்று அல பகழி மாரி, ஊழித் தீ என்ன, உய்த்தான்;
நின்றவன்-நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி,
சென்றனன்-கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான்.
 

அன்று, அவன் நாம வில்நாண் - அப்பொழுது, குருதிக் கண்ணன்
அச்சத்தைத்  தருகின்ற  வில்லின்  நாணை; அலங்கல் தோள் இலங்க
வாங்கி
 -  மாலையணிந்த தோள்  விளங்கும் படியாக இழுத்து; ஒன்று
அல  பகழி  மாரி
 -  பலவாகிய  அம்பு மழையை; ஊழித்தீ என்ன,
உய்த்தான்
   -    ஊழிக்காலத்துத்   தீயைப்   போலச்   (நெருப்பு
உமிழும்படியாகச்)  செலுத்தினான்;  நின்றவன் - அவனுடன் போருக்கு
எதிரூன்றி  நின்றவனாகிய  நளன்;நெடியது  ஆங்கு ஓர் தருவினால்
அகல  நீக்கி
 -  நெடியதாகிய  ஒரு மரத்தினால் (அந்த அம்புகளை)
அப்பாற் செல்லும்படி  நீக்கி;  கரியின்  வாரிக்கு  எதிர்படர்  சீயம்
அன்னான்   சென்றனன்
  -   யானைக்   கூட்டத்திற்கு   எதிராகச்
செல்லுகின்ற சிங்கத்தை ஒத்தவனாகிச் சென்றான்.
 

நாமம்-அச்சம்.   ஒன்று  அல-ஒன்று  அல்லாதது;  பல  என்றவாறு.
கரியின் வாரி - யானைக் கூட்டம்.
 

                                                  (33)