பக்கம் எண் :

474யுத்த காண்டம் 

8435.கரத்தினில் திரியாநின்ற மரத்தினைக் கண்டமாகச்
சரத்தினி்ன் துணித்து வீழ்த்த தறுகணான்தன்னை நோக்கி,
உரத்தினைச் சுருக்கிப் பாரில் ஒடுங்கினான், தன்னை
                                        ஒப்பான்
சிரத்தினில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய
                                      ஆர்த்தார்.
 

கரத்தினில்   திரியா நின்ற மரத்தினை - (தன்னுடைய) கையிலே
சுழல்கின்ற மரத்தை;  கண்டமாகச்  சரத்தினின்  துணித்து  வீழ்த்த
தறகணான் தன்னை நோக்கி
- துண்டமாக அம்பினால் வெட்டி விழச்
செய்த   அஞ்சாமையை   உடைய  குருதிக்  கண்ணனைப்  பார்த்து;
தன்னை   ஒப்பான்   -  தன்னைத்  தானே  ஒப்பவனாகிய  நளன்;
உரத்தினைச் சுருக்கிப் பாரில்  ஒடுங்கினான்
 - மார்பைச் சுருக்கிப்
பூமியில்  ஒடுங்கினான் போலப்  பதுங்கி;  சிரத்தினில்  குதித்தான் -
அவனுடைய   தலையில்  குதித்தான்;   தேவர்  திசைமுகம்  கிழிய
ஆர்த்தார்
    -     (அதனைப்     பார்த்து)    தேவர்களெல்லாம்
திசையிடங்களெல்லாம் பிளவுபடும்படியாக ஆரவாரித்தார்கள்.
 

                                                  (34)
 

8436.எரியும் வெங் குன்றின் உம்பர், இந்திரவில் இட்டென்ன,
பெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன், சோரி
சொரிய, வன் கண்ணின் மூக்கின் செவிகளின், மூளை
                                          தூங்க,
நெரிய, வன் தலையைக் காலால் உதைத்து, மாநிலத்தில்
                                       இட்டான்.
 

எரியும்     வெங்குன்றின் உம்பர் - நெருப்பு எரிகின்ற கொடிய
மலையின்மேலே;  இந்திரவில் இட்டென்ன - இந்திரவில் தோன்றினாற்
போல;  பெரியவன் தலைமேல்  நின்ற   பேர்   எழிலாளன்   -
வெருந்தோற்றமுள்ள   குருதிக்  கண்ணனது  தலையின்  மேல்  நின்ற
மிக்க அழகை  உடைய நளன்; வன் கண்ணின் மூக்கின் செவிகளின்
சோரி  சொரிய
 - (குருதிக்கண்ணனது) வலிய கண்களிலும், மூக்கிலும்,
செவிகளிலும்  இரத்தம்  சொரியவும்; மூளை தூங்க - மூளை சிதைந்து
வழியவும்; நெரிய வன் தலையைக் காலால் உதைத்து, மாநிலத்தின்
இட்டான்
- (அவனது) வலிய