| மகரக் கண்ணன் வதைப் படலம் | 475 |
தலையை நெரியும் படியாகக் காலால் உதைத்து (அவனைப்) பூமியில் தள்ளினான். | (35) | 8437. | அங்கு அவன் உலத்தலோடும், அழற் கொழுந்து ஒழுகும் கண்ணான், சிங்கன், வெங் கணையன், வில்லன், தார் அணி தேரின் மேலான், ‘எங்கு, அடா போதி?’ என்னா, எய்தினன்; எதிர் இலாத, பங்கம் இல்மேரு ஆற்றல், பனசன் வந்து, இடையில் பாய்ந்தாள். | அங்கு அவன் உலத்தலோடும் - குருதிக் கண்ணன் இறந்த அளவில்; அழற்கொழுந்து ஒழுகும் கண்ணான் சிங்கன் - நெருப்பை உமிழும் கண்களை உடைய சிங்கன்; வெங்கணையன், வில்லன் தார் அணி தேரின் மேலான் - கொடிய அம்பை உடையவனும், வில்லை உடையவனும், சிறு மணிகள் கட்டிய தேரின் மேல் ஏறியவனுமாகி; ‘எங்கு அடா! போதி?’ என்னா எய்தினன் - (நளனைப் பார்த்து) ‘எங்கடா போகிறாய்?’ என்று சொல்லிக் கொண்டே வந்தான் (அப்பொழுது); எதிர் இலாத, பங்கம் இல்மேரு ஆற்றல் - கெடுதலில்லாத மேருவைப் போன்ற ஆற்றலை உடையவனும், தனக்கு நிகரொருவருமில்லாதவனுமாகிய;பனசன் வந்து இடையில் பாய்ந்தான் - பனசன் (என்னும் வானர வீரன்) நடுவிலே வந்து குதித்தான். | (36) | 8438. | பாய்ந்தவன் தோளில், மார்பில், பல்லங்கள் நல்ல பண்போடு ஆய்ந்தன, அசனி போல, ஐ-இரண்டு அழுந்த எய்தான்; காய்ந்தனன், கனலி நெய்யால் கனன்றது போலக் காந்தி; ஏய்ந்து ஏழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக் கொண்டான். | பாய்ந்தவன் தோளில், மார்பில் - அப்படிக் குதித்த பனசனது தோள்களிலும், மார்பிலும்;பல்லங்கள் நல்ல பண்போடு ஆய்ந்தன - நல்ல தகுதி நோக்கி ஆராய்ந்து எடுத்தனவாகிய அம்புகள்; அசனி |
|
|
|