பக்கம் எண் :

476யுத்த காண்டம் 

போல   ஐ-இரண்டு அழுந்த எய்தான் - பத்தினை இடியைப் போல
அழுந்தும்படியாக (சிங்கன்)  எய்தான்; காய்ந்தனன். கனலி நெய்யால்
கனன்றது  போலக் காந்தி
 -  (அதைப் பார்த்து பனசன்) கோபித்து,
நெருப்பு  நெய்யால்  சுடர்விட்டு  எரிவது  போலக் கொதித்து; ஏய்ந்து
எழு   தேரினோடும்,     இமைப்பிடை எடுத்துக் கொண்டான்
-
(சிங்கனை)   பொருந்தி ஊர்ந்து வருகின்ற தேரோடும் ஓரிமைப்பிற்குள்
(கையினால்) தூக்கினான்.
 

                                                 (37)
 

8439.தேரொடும் எடுத்தலோடு, நிலத்திடைக் குதித்த செங்கண
்மேருவின் தோற்றத்தான்தன் உச்சிமேல் அதனை வீச;
பாரிடை விழுதலோடும், தானவன் உம்பர் பாய்ந்து
சோரியும் உயிரும் சோர, துகைத்தனன், வயிரத் தோளன்.
 

தேரொடும்   எடுத்தலோடு  -  (பனசன்  சிங்கனைத்)  தேரோடு
தூக்கினவுடனே; நிலத்திடைக்    குதித்த   செங்கண்   மேருவின்
தோற்றத்தான் தன்  உச்சிமேல்  அதனை  வீச
 -  தேரினின்றும்
பூமியிலே  குதித்த மலைபோன்ற வடிவத்தினையும் உடைய சிங்கனது
தலையின்  மேல் (பனசன்) அத்தேரை வீச; பாரிடை விழுதலோடும் -
அவ்வரக்கன்  நிலத்தில்  (அதுபட்டு)  விழுந்த  அளவில்;  தானவன்
உம்பர்  பாய்ந்து சோரியும்   உயிரும்   சோரத்   துகைத்தனன்,
வயிரத்தோளன்
 -  இரத்தம் மேலே பாயவும் உயிர் சோரவும் வயிரம்
போல்  உறுதியான  தோளை  உடைய அப்பனசனானவன் (சிங்கனது
உடம்பினை) மிதித்து உழக்கினான்.
 

                                                  (38)
 

8440.தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும், கவியின் தானை
மராமரம், மலை என்று இன்ன வழங்கவும், வளைந்த தானை,
பராவ அரும் வெள்ளம் பத்தும் பட்டன; பட்டிலாதார,
இராவணன் தூதர் போனார், படைக்கலம் எடுத்திலாதார்.
 

தராதல  வேந்தன் மைந்தர்  சரத்தினும் - பூமிக்கு மன்னனாகிய
தசரதனுடைய மைந்தராகிய இராம இலக்குவர் எய்கின்ற