பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 479

                           இராவணன் இந்திரசித்தை அழைத்தல்
 

8441.கரன் மகன் பட்டவாறும், குருதியின் கண்ணன் காலின்
சிரன் நெரிந்து உக்கவாறும், சிங்கனது ஈறும், சேனைப்
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும், பகரக் கேட்டான்;
வரன்முறை துறந்தான், ‘வல்லைத் தருதிர், என் மகனை!’
                                        என்றான்.
 

கரன்மகன்   பட்டவாறும் - கரனுடைய மகனான மகரக் கண்ணன்
இறந்த வகையினையும்; குருதியின் கண்ணன் காலின் சிரன் நெரிந்து
உக்கவாறும்
 -  இரத்தாட்சன் என்னும் அரக்கன் (நளனது) காலினால்
சிரம்   நெரிந்து  உயிர்விட்ட  வகையினையும்;  சிங்கனது  ஈறும்  -
(பனசனால்  ஏற்பட்ட)  சிங்கனது  முடிவினையும்; சேனைப் பரம்இனி
உலகுக்கு  ஆகாது என்பதும்
- (தனது) சேனைப் பாரம் இனி உலகில்
இல்லாமல்   ஒழிந்ததென்பதையும்;  பகரக்  கேட்டான்  -  (தூதர்கள்
அறிந்து)  சொல்லக்   கேட்டவனாய்;   வரன்  முறை  துறந்தான்  -
நீதிநெறியினை  நீங்கியவனாகிய  இரவணன்;  ‘வல்லைத் தருதிர் என்
மகனை’   என்றான்
  -  ‘என்  மகனை  (இந்திரசித்தை)  விரைவில்
அழைத்து வருவீராக’ என (அத்தூதரிடம்) கூறினான்.
 

தனக்கு   மேன்மேலும் ஏற்படுகின்ற தோல்விகளைக் கண்டும் மனம்
மாறுபடாமல்  -  தன்  தவற்றை  உணராமல்  அகங்காரம்  கொண்டு
செயல்படுகின்றானாகையால்   இராவணனை  ‘வரன்முறை  துறந்தான்’
என்றார்.
 

                                                   (1)
 

8442.‘கூயினன், நுந்தை’ என்றார்; குன்று எனக் குவிந்த
                                      தோளான்,
‘போயின நிருதர் யாரும் பொன்றினர் போலும்!’
                                       என்றான்;
‘ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்?’ என்னா,
மேயது சொன்னார், தூதர்; தாதைபால் விரைவின்
                                       வந்தான்.