பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 481

உலப்பறு - அளவற்ற, குப்பை - குவியல்.
 

                                                   (3)
 

8444.

வலங்கொண்டு  வணங்கி, வான்   செல் ஆயிரம்  மடங்கல்
                                           பூண்ட
பொலங்   கொடி   நெடுந்  தேர்  ஏறி,  போர்ப்   பணை
                               முழங்கப்  போனான்;
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம்,
                                         யானைக்
குலங்களும்,   தேரும்  மாவும்,  குழாம்  கொளக் குழீஇய
                                         அன்றே.
 

வலங்கொண்டு   வணங்கி - (பின்பு தன் தந்தையை) வலம் வந்து
வணங்கி;  வான்செல் ஆயிரம் மடங்கல்  பூண்ட - வான் வழியாகச்
செல்ல வல்லதும் ஆயிரம் சிங்கங்கள் பூட்டப்பட்டதும்; பொலங்கொடி
நெடுந்தேர் ஏறி
- பொன் மயமான கொடியினை உடையதுமான நீண்ட
தேரின் மேல் அமர்ந்து; போர்ப்பணை முழங்கப் போனான் - போர்
முரசம்  முழங்கப்  (போர்க்களம்  நோக்கி  இந்திரசித்து) புறப்பட்டுப்
போனான்;  அலங்கல்வாள் அரக்கர் தானை அறுபது  வெள்ளம் -
(அவனுடன்)  வெற்றிமாலை  அணிந்த  வாட்படை  தாங்கிய அரக்கர்
சேனை அறுபது வெள்ளமும்; யானைக் குலங்களும் தேரும், மாவும் -
யானைக்  கூட்டங்களும்,  தேர்களும்,  குதிரைகளும்; குழாம் கொளக்
குழீஇய
- கூட்டமாகத் திரண்டு சென்றன.
 

                                                   (4)
 

8445.

கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, மாப் பேரி கொட்டி,
பம்பை, தார் முரசம், சங்கம், பாண்டில், போர்ப் பணவம்,
                                           தூரி,
கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை,
அம்பலி, கணுவை, ஊமை, சகடையோடு ஆர்த்த அன்றே.
 

கும்பிகை   திமிலை   செண்டை  குறடு - கும்பிகை,   திமிலை,
செண்டை  குறடு;  மாப்பேரி - பெரிய   பேரிகை; கொட்டி  - கொடு
கொட்டி;    பம்பை, தார்முரசம்,  சங்கம்  -  பம்பை, தார் அணியப்
பெற்ற முரசம், சங்கம்; பாண்டில், போர்ப்பணவம், தூரி -