| சிங்கத்தின் முழக்கம், வாசிச் சிரிப்பு, தேர் இடிப்பு, திண் கைம் மங்குலின் அதிர்வு,-வான மழையொடு மலைந்த அன்றே. |
சங்கொலி - சங்கின் ஒலியும்; வயிரின் ஓசை - ஊதுகொம்பின் ஓசையும்; ஆகுளி - ஆகுளியின் ஒலியும்; தழங்கு காளம் பொங்கு ஒலி - காளம் என்னும் வாத்தியத்தினின்றும் மிக்குத் தோன்றுகின்ற ஒலியும்; வரிகண் பீலிப் பேர் ஒலி - மயிற் கண் வரிந்த பீலியென்ற வாத்தியத்தின் பேரொலியும்; வேயின் பொம்மல் - புல்லாங்குழலின் ஓசையும்; சிங்கத்தின் முழக்கம் - சிங்கத்தின் முழக்கமும்; வாசிச் சிரிப்பு - குதிரையின் கனைப்பொலியும்; தேர் இடிப்பு - தேரினின்றும் தோன்றுகின்ற இடி போன்ற ஒலியும்; திண்கைம் மங்குலின் அதிர்வு - வலிய துதிக்கையினை உடைய மேகம் போன்ற யானையின் ஒலியும்; மழையொடு மலைந்த - (ஆகிய இவை) வானத்திலுள்ள மேகங்களின் ஒலியோடு மாறுபட்டுத் தோன்றின. |
வயிர் - ஊதுகொம்பு. ஆகுளி - சிறு பறை. தழங்குதல் - ஒலித்தல், காளம் - எக்காளம், பீலி - சிறு சின்னம் என்னும் துளைக்கருவி. வாசி - குதிரை. திண்கை மங்குல் என்பது அன்மொழித் தொகையாக. யானையைக் குறித்தது. (திண்மையான துதிக்கையை உடைய மேகம். மேகம் இங்கே யானைக்கு உருவகம்.) |
(7) |
8448. | பண் தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகு தீம் தேன், கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல், வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம், வானத்து அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே. |
பண்தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகுதீம் தேன் - பண்ணைத் தோற்றுவிக்கின்ற சொற்களின் தன்மையினை உடைய பலவகை வாத்தியங்களினின்றும் தோன்றும் இனிய இசையாகிய தேனும்; கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல் - |