பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 487

தன்மையினை     உடையதுமாகிய      வலம்புரிச்       சங்கினைக்
கையிலெடுத்து;  சிரம்  பொதிர்ந்து  அமரர்  அஞ்ச,   திசையும் சிந்த
ஊதினான்  - தேவர்கள் தலை நடுக்குற்று அஞ்சவும், திசைகள்  நிலை
கெட்டுச் சிதையவும் ஊதினான்.
 

                                                  (13)
 

8454.

சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப் பெருந் தானை, தள்ளி
சிங்கத்தின் நாகம் வந்து செவிப் புக விலங்கு சிந்தி,
‘எங்கு உற்ற?’ என்னாவண்ணம் இரிந்த போல் இரிந்த;
                                          ஏழை-
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி,
                                      ஆர்த்தான்.
 

சங்கத்தின்   முழக்கம் கேட்ட கவிப்பெருந்தானை - வலம்புரிச்
சங்கின்  முழக்கத்தைக்  கேட்ட  வானரப்  பெருஞ்சேனை,; தள்ளி -
(அச்சத்தால்  ஒன்றையொன்று)’ தள்ளிக் கொண்டு; சிங்கத்தின் நாதம்
வந்து  செவிப்புக விலங்கு  சிந்தி
- சிங்கத்தின் முழக்கம் வந்து தம்
செவிகளிற்  புக்க   அளவில்  விலங்குகள்  (தாம்  இருந்த இடங்களை
விட்டுச்) சிதறி; “எங்கு  உற்ற”  என்னா  வண்ணம் இரிந்த போல்
இரிந்த
- ‘எங்கே சென்றன’ என அறிந்து கொள்ள முடியாதவாறு ஓடிப்
போதல்போல ஓடிப்போயின;  ஏழை  பங்கத்தன் மலைவில் அன்ன
சிலை ஒலி   பரப்பி  ஆர்த்தான்
 -  (அந்நிலையில்  இந்திரசித்து)
பெண்ணொரு    பாகனாகிய   சிவபெருமானது   மேரு   மலையாகிய
வில்லினை    ஒத்த  (தன்னுடைய)  வில்லின்  நாணொலியைப்  பரவச்
செய்து ஆரவாரித்தான்.
 

                                                  (14)
 

                                    வானர சேனையின் ஓட்டம்
 

8455.

கீண்டன, செவிகள்; நெஞ்சம் கிழிந்தன; கிளர்ந்து செல்லா
மீண்டன, கால்கள், கையின் விழுந்தன, மரனும் வெற்பும்;
பூண்டன, நடுக்கம்; வாய்கள் புலர்ந்தன; மயிரும் பொங்க,

‘மாண்டனம் அன்றோ?’ என்ற-வானரம் எவையும் மாதோ.