பக்கம் எண் :

488யுத்த காண்டம் 

வானரம்     எவையும்  -   (இந்திரசித்தின்  ஆரவாரங்கேட்ட)
வானரங்கள்  யாவும்; கீண்டன செவிகள் - காதுகள் கிழியப் பெற்றன;
நெஞ்சம் கிழிந்தன - மார்பு பிளந்தன; கிளர்ந்து செல்லா மீண்டன
கால்கள்
  -  உற்சாகங்கொண்டு  செல்ல  முடியாதனவாகக்  கால்கள்
திரும்பின; கையின்  விழுந்தன  மரனும்  வெற்பும்  - (ஏற்கெனவே
எடுத்திருந்த)   மரங்களும்  மலைகளும் கைகளினின்றும் (நழுவி) விழப்
பெற்றன;  பூண்டன  நடுக்கம்  -  நடுக்கம் மேற்கொண்டன; வாய்கள்
புலர்ந்தன
   -   வாய்கள்    உலரப்   பெற்றன;  மயிரும் பொங்க
‘மாண்டனம் அன்றோ?’  என்ற
 -  (அச்சத்தால்) மயிர்க்கூச்செறிந்து
‘நாமெல்லாம்   விரைவில்   இறந்தொழிவோமல்லவா?’  என  அரற்றி
வருந்தின.
 

                                                  (15)
 

8456.

செங் கதிர்ச் செல்வன் சேயும், சமீரணன் சிறுவன்தானும்,
அங்கதப் பெயரினானும், அண்ணலும், இளைய கோவும்,
வெங் கதிர் மௌலிச் செங் கண் வீடணன், முதல வீரர்
இங்கு இவர் நின்றார் அல்லது, இரிந்தது, சேனை எல்லாம்.
 

செங்கதிர்ச்  செல்வன்  சேயும்  -  செந்நிற ஒளித் தொகுதியை
உடைய  செல்வனாகிய  சூரியனுடைய  மகன்  சுக்கிரீவன்;  சமீரணன்
சிறுவன்  தானும்
-  வாயுதேவனின்   மகனான  அனுமன்; அங்கதப்
பெயரினானும்  
-   அங்கதன்  என்னும்   பெயரை   உடையவன்;
அண்ணலும், இளைய கோவும் - இராமன்,  இலக்குவன்;  வெங்கதிர்
மௌலிச் செங்கண் வீடணன் முடிய
-  வெவ்விய ஒளிக்கற்றையினை
உடைய (மணிகள்  இழைத்த)   முடியினையும்   சிவந்த  கண்களையும்
உடைய வீடணன்  வரை;  வீரர்  இங்கு  இவர் நின்றார் - முதலாக
உள்ள ஏனைய படை வீரர்களும் ஆகிய இவர்களே  (போர்க்களமாகிய)
இவ்விடத்தில் நின்றவர்கள்; அல்லது,  இரிந்தது  சேனை  எல்லாம்
-  அல்லாமல் ஏனைய   படைஞர்களாகிய   குரங்குகள்  அனைத்தும்
நிலைகெட்டு ஓடின.
 

                                                  (16)
 

8457.

படைப் பெருந் தலைவர் நிற்க, பல் பெருந் தானை
                                         வேலை,
உடைப்புறு புனலின் ஓட, ஊழிநாள் உவரி ஓதை