பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 489

கிடைத்திட முழங்கி ஆர்த்துக் கிளர்ந்தது; நிருதர் சேனை,
அடைத்தது, திசைகள் எல்லாம்; அன்னவர் அகத்தர்
                                         ஆனார்.
 

படைப்பெருந்     தலைவர் நிற்க - பெருமை வாய்ந்த (வானரப்)
படைத்தலைவர்கள்  மட்டும்  (இடம்  பெயராது) நிலைத்து நிற்க; பல்
பெருந்தானை  வேலை
 -  மிகப்பலவாகிய  (குரக்குச்)  சேனையாகிய
கடல்;  உடைப்புறு  புனலின்  ஓட - கரைகளை உடைத்துச் செல்லும்
பெரிய நீர்ப்பெருக்கினைப் போல் ஓட; நிருதர் சேனை - (அதுகண்ட)
அரக்கர் சேனையானது; ஊழிநாள் உவரி ஓதை கிடைத்திட முழங்கி
ஆர்த்துக்  கிளர்ந்தது
  -   ஊழிக்   காலத்தே  தோன்றும்  கடல்
ஓசையினைப் போன்று பேரொலி  உண்டாகுமாறு முழங்கி ஆரவாரித்து
உள்ளக் கிளர்ச்சி உடையதாய்;  திசைகள்  எல்லாம்  அடைத்தது -
திசைகள்  எல்லாவற்றையும்   (வெற்றிடம்  இல்லையாம்படி) அடைத்து
நின்றது;  அன்னவர் அகத்தர்  ஆனார்  -  (இடம் பெயராது நின்ற
இராம   இலக்குவரும்    ஏனைய   படைத்   தலைவரும்)   அரக்கர்
சேனையின் உள்ளிடத்தவராயினார்.
 

                                                  (17)
 

        அனுமன் - அங்கதர் தோள்களில் முறையே இராம-இலக்குவர்
 

8458.

மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத் தோள்மேல்
வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு சிகரத் தோள்மேல்
ஆரியற்கு இளைய கோவும், ஏறினர்; அமரர் வாழ்த்தி,
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர், இடைவிடாமல்.
 

மாருதி அலங்கல் மாலை மணி அணி  வயிரத்தோள்   மேல்
வீரனும்
  -  அனுமனுடைய  அசைந்தொளிரும்  இயல்பினவாகிய மலர்
மாலையும்  மணிகளும்  அணிந்த திண்ணிய தோளின் மேல் வீரனாகிய
இராமனும்; வாலி  சேய்  தன்  விறல் கெழு சிகரத் தோள்மேல் -
வாலி மைந்தன்   அங்கதனுடைய  வெற்றித் திறன் பொருந்திய மலைச்
சிகரத்தை   ஒத்த  தோளின்  மேல்;  ஆரியற்கு  இளையகோவும் -
(இராமன் என்னும்) பெரியோனுக்குத்