தம்பியாகிய இலக்குவனும்; ஏறினர் - (போர் மேற்செல்ல) ஏறி அமர்ந்தனர்; அமரர் வாழ்த்தி, வேரி அம்பூவின் மாரி சொரிந்தனர், இடைவிடாமல் - (அதுகண்டு) தேவர்கள் (அவ்விருவரையும்) வாழ்த்தித் தேன் நிறைந்த அழகிய மலர் மழையினை இடைவிடாது சொரிந்தார்கள். | (18) | 8459. | விடையின்மேல், கலுழன்தன்மேல், வில்லினர் விளங்குகின்ற கடைஇல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார்-கண்ணுற்று அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்றுஇன்னார், தொடையின் மேல் மலர்ந்த தாரர், தோளின்மேல் தோன்றும் வீரர். | கண்ணுற்று அடையின் - கண்ணுக்குப் புலனாகிப் பொருந்துமாயின்; மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார் - மேரு மலையையும் வீழ்த்தும், அனுமன் அங்கதன் என்ற இவர்களின்; தோளின் மேல் தோன்றும் - தோள்களின் மேல் காணப்பெறுகின்றவரும்; மேல் மலர்ந்த தொடையின் தாரர் - மேலே விளங்கும்படியான தொகுக்கப்பெற்ற மாலையினரும்; வில்லினர், வீரர் - வில் தாங்கியவருமான, இராம இலக்குவர்; விடையின் மேல் கலுழன் தன்மேல் விளங்குகின்ற - ஆனேற்றின் மீதும், கருடன் மீதும் விளங்கித் தோன்றுகின்ற; கடைஇல் மேல் உயர்ந்த காட்சி - முடிவின்றி மேம்பட்டுயர்ந்த காட்சியினை உடைய; இருவரும் கடுத்தார் - சிவன், திருமால் என்ற இரு மூர்த்திகளையும் ஒத்துத் தோன்றினர். | (19) | 8460. | நீலனை முதலாய் உள்ள நெடும் படைத் தலைவர் நின்றார், தாலமும் மலையும் ஏந்தி, தாக்குவான் சமையும் காலை, ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன் மேல் அமர் விளைவை உன்னி, விலக்கினன், விளம்பலுற்றான்; |
|
|
|