பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 493

வந்த   இராக்கத வெள்ளம் தன்னை - (பொருதற்கு) எதிர் வந்த
வெள்ளக்   கணக்கினவாகிய   அரக்கர்  சேனைகளை;  இமைப்பதன்
முன்னம்
- இமைப்பொழுதுக்குள்ளாக; குமைத்தொழில் புரிந்த வீரர்
- அழிக்கும் தொழிலைப்  புரிந்த  வீரர்களாகிய  இராம  இலக்குவரது;
தனுத்தொழில் குறித்து,  இன்று   எம்மால்  அமைப்பது  என்?
 -
விற்றொழில்  வன்மையைக்  குறித்து  எம்மால்  கூறுதற்கு  யாதுளது?
உமைக்கு  ஒரு பாகன்  -  உமா  தேவியை ஒரு பாகத்துக் கொண்ட
சிவபெருமான்;  மேரு   என்று  அமைந்த வில்லான் - மேரு மலை
என அமைந்த  வில்லினால்; எய்த  புரங்களின்  ஒருங்கி வீழ்ந்த -
எய்து  அழித்த   முப்புரங்களைப்    போன்று (அச்சேனைகள் யாவும்)
அழிந்து    வீழ்ந்தன;   பிறிது  ஒன்று  உண்டோ? - (என்பதன்றிச்
சொல்லத்தக்க உவமை) வேறொன்றுளதோ?
 

                                                  (23)
 

8464.

தேரின்மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும்
வீரருள் வீரன் கண்டான்-விழுந்தன விழுந்த என்னும்
பாரின்மேல் நோக்கின் அன்றேல், பட்டன பட்டார்
                                         என்னும்
போரின்மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல்.
 

பாரின் மேல் நோக்கின் - (போர்க்களமாகிய) நிலப்பரப்பின் மேல்
நோக்கிய; விழுந்தன  விழுந்தன  என்னும் அன்றேல் - விழுந்தவை
விழுந்த   வண்ணமாக  இருந்தன  அளவில்   காண்பதன்றி;  பட்டன
பட்டார்   என்னும்   போரின்மேல்   நோக்க  இலாத
-  போர்
நிகழ்ச்சியை நோக்கி (இன்னவை) இறந்தன  (இன்னார்)    இறந்தார்கள்
எனப்பிரித்தறிய    வொண்ணாதவாறு;   இருவரும் பொருத பூசல் -
(இராம இலக்குவராகிய) இருவரும் நிகழ்த்திய போர்த்தொழிலை; தேரின்
மேல்   சிலையின்   நின்ற 
-  தேரின்  மேல்  வில்லை   ஊன்றி
நின்ற;  இந்திரசித்து  என்று  ஓதும்  வீரருள் வீரன் கண்டான் -
‘இந்திரசித்து’ எனப் புகழப் பெறும் வீரர்க்கெல்லாம் வீரனாகிய அவன்
பொருந்த நோக்கினான்.
 

                                                  (24)
 

8465.

‘யானை பட்டனவோ!’ என்றான்; ‘இரதம்   இற்றனவோ!’
                                        என்றான்;

‘மான மா வந்த எல்லாம் மறிந்து ஒழிந்தனவோ!’ என்றான்;