| ‘ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ, எடுக்க!’ என்றான்- வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின், மயக்கம் உற்றான். | வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் - (இராம இலக்குவரது போர்த்தொழில் நிகழ்ச்சியை நோக்கிய இந்திரசித்து) ஆகாயம் அளவும் ஓங்கிய பிணத்தின் குவியல்கள் (போர்க்களத்தை) மறைத்தலால் திகைப்புற்றவனாகி; ‘யானை பட்டனவோ!’ என்றான் - ‘யானைகள் இறந்து பட்டனவோ!’ என ஏங்கினான்; ‘இரதம் இற்றனவோ!’ என்றான் - ‘தேர்கள் முறிந்தனவோ?’ என வருந்தினான்; ‘மானமா வந்த எல்லாம் மறித்து ஒழிந்தனவோ!’ என்றான் - ‘வீரத்திற் குறையாத பெருமை உடையனவாய் வந்த குதிரைகள் யாவும் மாண்டு ஒழிந்தனவோ’ என இரங்கினான்; ‘ஏனைவாள் அரக்கர் யாரும் இல்லையோ, எடுக்க!’ என்றான் - (இறந்து வீ்ழ்ந்த பிணங்களை) எடுத்து அப்பாற்படுத்த மற்றும் இறவாதுள்ள வாள் வீரராகிய அரக்கர் ஒருவரும் (இங்கு) இல்லையோ என ஏக்கமுற்று வருந்தினான். | (25) | 8466. | ‘செய்கின்றார் இருவர், வெம் போர்; சிதைகின்ற சேனை நோக்கின், “அய்யம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக!” என்று, வய்கின்றார்; அல்லர் ஆக, வரி சிலை வலத்தால் மாள எய்கின்றார் அல்லர்; ஈது எவ் இந்திரசாலம்?’ என்றான். | ‘செய்கின்றார் இருவர் வெம்போர் - ‘கொடிய போரைச் செய்கின்றவர்களோ இருவரே; சிதைகின்ற சேனை நோக்கின் - (இவர்களால்) சிதைந்தொழியும் சேனைகளை எண்ணிப் பார்த்தாலோ; அய்யம்தான் இல்லா வெள்ளம் அறுபது - ஐயம் அற்றவகையில் அறுபது வெள்ளம் என்னும் தொகையினவாகும்; ‘அவிக’ என்று வய்கின்றார் அல்லர் - (இவையாவும் ஒருசேர) அழிந்தொழிக என்று சபித்துரைக்கின்றவர்களும் அல்லர்; ஆகின் வரிசிலை வலத்தால் மாள எய்கின்றார் அல்லர் - ஆனால், வரிந்து |
|
|
|