பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 495

கட்டப்பெற்ற     வில்லின் துணை   கொண்டு  தம்  வன்மை விளங்க
(பகைவர்சேனை) மாளும்படி வலிந்து எய்கின்றவர்களும்  அல்லர்; ‘ஈது
எவ்  இந்திரசாலம்?’  என்றான்
-  (இப்பெரும் சேனையை அழித்த)
இச்செயல்   எத்ததைய  இந்திரசால  வித்தையோ?’  என்று   வியந்து
கூறினான் (இந்திரசித்து)
 

                                                  (26)
 

               போர் நிகழ்ச்சியை இந்திரசித்தன் வியந்து நோக்குதல்
 

8467.

அம்பின் மா மழையை  நோக்கம்;   உதிரத்தின்  ஆற்றை
                                        நோக்கும்;
உம்பரின் அளவும் சென்ற பிணக் குன்றின் உயர்வை
                                        நோக்கும்;
கொம்பு அற உதிர்ந்து முத்தின் குப்பையை நோக்கும்;
தும்பியை நோக்கும்; வீரர் சுந்தரத் தோளை நோக்கும்;
 

அம்பின்     மா மழையை நோக்கும் - (வியப்புற்ற இந்திரசித்து)
அம்பின்   பெருமழையை  உற்றுப்பார்ப்பான்;  உதிரத்தின்  ஆற்றை
நோக்கும்
- இரத்தப் பெருக்காகிய ஆற்றினைப் பார்ப்பான்; உம்பரின்
அளவும்  சென்ற
 -  விண்ணின்  உச்சி  அளவும் உயர்ந்து ஓங்கிய;
பிணக்குன்றின்  உயர்வை நோக்கும்
 -  பிணங்களின்  குவியலாகிய
மலையின்  உயர்ச்சியைப் பார்ப்பான்; கொம்பு அற உதிர்ந்த முத்தின்
குப்பையை     நோக்கும்
    -    அவ்யானைகளின்    தந்தங்கள்
அறுபட்டமையால்  சிதறிக்கிடக்கும்  முத்தின்   குவியலைப் பார்ப்பான்;
வீரர்    சுந்தரத்    தோளை    நோக்கும்
- வீரர்களாகிய இராம
இலக்குவரின் அழகிய தோள்களை உற்றுப் பார்ப்பான்.
 

                                                  (27)
 

8468.

மலைகளை நோக்கும்;  மற்று  அவ்  வான் உறக் குவிந்த
                                        வன் கண்
தலைகளை நோக்கும்; வீரர் சரங்களை நோக்கும்; தாக்கி,
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து
                               ஒழுக்கை
நோக்கும்;
சிலைகளை நோக்கும்; நாண் ஏற்று இடியினைச் செவியின்
                                         ஏற்கும்;