பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 497

பகைவராயினும்    அவர் தம் பேராற்றலை வியந்து விரும்பி நிற்கும்
இந்திரசித்தனின்  பண்பைக்  கூறி பகைவனும் வியந்து நிற்கும்   இராம
இலக்குவரின் போர்த்திறனைப் புலப்படுத்துகிறார்.
 

                                                  (29)
 

8470.

அறுபது வெள்ளம் ஆய அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ற,
எறிவன, எய்வ, பெய்வ, எற்றுறு படைகள் யாவும்,
பொறி வனம் வெந்த போலச் சாம்பராய்ப் 
                                 போயதுஅல்லால்,
செறிவன இல்லா ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும்;
 

அறுபது வெள்ளம்  ஆய  அரக்கர்தம்   ஆற்றற்கு   ஏற்ற -
அறுபது வெள்ளம் என்னும் அளவினராகிய அரக்கர்களின் ஆற்றலுக்குப்
பொருந்தியனவாய்;   எறிவன,   எய்வ,   பெய்வ எற்றுறு படைகள்
யாவும்
-  (நேர் நின்று) எறிவனவும் (சேய்மையில்   நின்று   வில்லில்
தொடுத்து) எய்வனவும், மிகுதியாகப் பொழிவனவும், எடுத்து வீசுவனவும்
ஆகிய   ஆயுதங்கள்    யாவும்;    பொறிவனம்   வெந்த போலச்
சாம்பராய்ப் போயது அல்லால்
  -  தீப்பொறிகளாற்  காடு  வெந்து
அழிந்தாற்  போன்று   சாம்பராய்  அழிந்ததன்றி;  செறிவன  இல்லா
ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும்
 -  (அவற்றுள்  எவையும்
பகைவரை) நெருங்கித் தாக்குதலில்லாத் தன்மையினைத் தன் மனத்தால்
விளங்க ஆராய்ந்து நோக்குவான்.
 

                                                  (30)
 

8471. 

வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்மேல் மகளிர் மாழ்கி.
குயில் தலத்து உக்க என்னக் குழைகின்ற குழைவை
                                       நோக்கும்;
எயிறு  அலைத்து   இடிக்கும்  பேழ்  வாய்த்  தலைஇலா
                                  ஆக்கை ஈட்டம்
பயிறலை, பறவை பாரில் படிகிலாப் பரப்பை, பார்க்கும்;
 

வயிறு    அலைத்து ஓடிவந்து - அரக்க மகளிர் (தத்தம் கணவர்
இறந்த  செய்தி  கேட்டு)  வயிற்றில்  அடித்துக்  கொண்டு  ஓடிவந்து;
கொழுநர் மேல் மகளிர்  மாழ்கி  - (தத்தம்) கணவர் மேல் விழுந்து
மனங்கலங்கி;  குயில் தலத்து  உக்க  என்னக் - குயில்கள் நிலத்தில்
வீழ்ந்து அரற்றின என்னும்படி; குழைகின்ற குழைவை நோக்கும் -