பக்கம் எண் :

498யுத்த காண்டம் 

மனம்   நைந்து   இரங்குகின்ற   இரங்குதலை   நோக்குவான்; எயிலு
அலைத்து இடிக்கும் பேழ்வாய்த்தலை இலா ஆக்கை  ஈட்டம்
 -
பற்களைக்    கடித்து  இடிபோற்  பேரொலி செய்யும் பிளந்த வாயினை
உடையதலைகள்    உயிருள்ள  காலத்து  உடையனவாய்  இப்பொழுது
இலாத  உடல்களின்  தொகுதிகள்;  பயிறலை - (போர்க்களம் எங்கும்)
பொருந்தி ஆடுவதனையும்;  பறவை  பாரில்  படிகிலாப்  பரப்பை,
பார்க்கும்
 -  (அவற்றை  நெருங்குதற்கு அஞ்சிப் பறவைகள் பூமியிற்
படிந்து   நிணங்கவர்தற்கு   இயலாத  (போர்க்களப்)  பரப்பினையும்
(ஒருங்கு) நோக்குவான்.
 

                                                  (31)
 

8472.

‘அங்கதர் அனந்த கோடி உளர்’ எனும்; ‘அனுமன்
                                        என்பாற்கு
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும்’ என்னும்;

‘எங்கும் இம் மனிதர் என்பார் இருவரேகொல்!’ என்று
                                        உன்னும்;-
சிங்கஏறு அனைய வீரர் கடுமையைத் தெரிகிலாதான்.
 

அங்கதர்  அனந்தகோடி உளர் எனும் - (இலக்குவனைச் சுமந்து
திரியும்)   அங்கதராயினார்  (ஒருவரன்றிப்)  பல  கோடி அளவினராக
உள்ளார்’ என்பான்; இங்கு அனுமன் என்பாற்கு - இங்கு (இராமனைச்
சுமந்து  திரியும்)  அனுமன் என்பவனுக்கு; இனி உலகம் யாவும் இடம்
இலை போலும் என்னும்
- எல்லா உலகங்களிலும் இடம் இல்லையாய்
விடுமோ என்பான்;  சிங்க ஏறு அனைய வீரர் - ஆண் சிங்கத்தினை
ஒத்த வீரர்களாகிய இராம இலக்குவரது; கடுமையைத் தெரிகிலாதான்
- போரின் விரைவினை அறிந்து கொள்ள இயலாதவனாகிய இந்திரசித்து;
எங்கும் இம்மனிதர் என்பார்  இருவரே  கொல்  என்று உன்னும்
- இம்மனிதர் இருவரே  எல்லா  இடங்களிலும் நிரம்பி விட்டார்களோ?
என இவ்வாறு எண்ணுவானாயினான்.
 

                                                  (32)
 

8473.

ஆர்க்கின்ற அமரர்தம்மை நோக்கும்;  அங்கு   அவர்கள்
                                         அள்ளித்
தூர்க்கின்ற பூவை நோக்கும்; துடிக்கின்ற இடத் தோள்
                                        நோக்கும்;