பக்கம் எண் :

 மாயா சனகப் படலம் 5

முளைப் பிறை நெற்றி வான மடந்தையர், முன்னும்
                                     பின்னும்,
வளைத்தனர் வந்து சூழ, வந்திகர் வாழ்த்த, வந்தான்.

 

முளைப்பிறை  நெற்றி வான  மடந்தையர் - இளம்பிறை போன்ற
நெற்றியை  உடைய தேவ  மகளிர்; விளக்கு ஒரு விளக்கம் தாங்கி -
ஒளியுள்ள  விளக்கு  ஒரு  விளக்கைத் தாங்கிக் கொண்டு; மின் அணி
அரவின்  சுற்றி
 -  ஒளி  பொருந்திய  மேகலையைப்  பாம்பு போல்
இடுப்பிலே  சுற்றி; இளைப்புறும் மருங்குல் நோவ - இளைத்தலுடைய
இடை  நோகுமாறு;  முலை  சுமந்து  இயங்கும் என்ன - முலையைச்
சுமந்து  கொண்டு  இயங்கும்   என்று வருணித்துக் கூறுமாறு; முன்னும்
பின்னும்   வளைத்தனர்  வந்து  சூழ
 -  தம்  முன்னும்  பின்னும்
வளைத்து  வந்து  சூழ;   வந்திகர்   வாழ்த்த  வந்தான்  -  பரவி
வாழ்த்துவோர் வாழ்த்த வந்தான்.
 

முளைப்பிறை  - இளம்பிறை;  வந்திகர்  -  பரவி  வாழ்த்துவோர்;
வளைத்தனர் - முற்றெச்சம்.
 

                                                 (6)
 

       இராவணன் பீடத்தில் வீற்றிருந்து, சீதையை நோக்கிப் பேசுதல்

7638.

பண்களால் கிளவி செய்து, பவளத்தால் அதரம் ஆக்கி,
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின்
                                          ஈட்ட,
எண்களால் அளவு ஆம் மானக் குணம் தொகுத்து
                                   இயற்றினாளை,
கண்களால் அரக்கன் கண்டான், அவளை ஓர் கலக்கம்
                                      காண்பான்.

 

பண்களால் கிளவி செய்து - இசையால் பேச்சைச் செய்து; அதரம்
பவளத்தால் ஆக்கி
 -  உதடுகளைப்  பவளத்தால் ஆக்கி; பெண்கள்
ஆனார்க்குள்
 -  பெண்களாய்ப்  பிறந்தவர்களுக்கு  அமைந்த; நல்ல
உறுப்பு எலாம்  பெருக்கின்  ஈட்ட
- அழகிய உறுப்புகளை எல்லாம்
மிகுதியாகச்   சேர்த்து  உண்டாக்கி;   எண்களால்   அளவு   ஆம்
மானக்குணம் தொகுத்து இயற்றிளாளை
- எண்ணி அளவிட முடியாத
பெருமை  மிகு  பண்புகளை ஒன்று  சேர்த்து  உருவாக்கப்பட்டவளான
சீதையை; கண்களால்  அரக்கன்  -  தன் இருபது கண்களாலும் காம
நோக்கோடு இராவணன்;