| முளைப் பிறை நெற்றி வான மடந்தையர், முன்னும்                                                 பின்னும்,       வளைத்தனர் வந்து சூழ, வந்திகர் வாழ்த்த, வந்தான்.      | 
முளைப்பிறை       நெற்றி வான  மடந்தையர் - இளம்பிறை போன்ற நெற்றியை  உடைய தேவ  மகளிர்;       விளக்கு ஒரு விளக்கம் தாங்கி - ஒளியுள்ள  விளக்கு  ஒரு  விளக்கைத் தாங்கிக் கொண்டு;       மின் அணி அரவின்  சுற்றி   -  ஒளி  பொருந்திய  மேகலையைப்  பாம்பு போல் இடுப்பிலே  சுற்றி;      இளைப்புறும் மருங்குல் நோவ  - இளைத்தலுடைய இடை  நோகுமாறு;        முலை  சுமந்து  இயங்கும் என்ன - முலையைச் சுமந்து  கொண்டு  இயங்கும்        என்று வருணித்துக் கூறுமாறு;  முன்னும் பின்னும்   வளைத்தனர்  வந்து  சூழ  -  தம்  முன்னும்  பின்னும் வளைத்து       வந்து  சூழ;   வந்திகர்   வாழ்த்த  வந்தான்        -  பரவி வாழ்த்துவோர் வாழ்த்த வந்தான்.      | 
முளைப்பிறை  -      இளம்பிறை;  வந்திகர்  -  பரவி  வாழ்த்துவோர்; வளைத்தனர் - முற்றெச்சம்.      | 
                                                      (6)      | 
            இராவணன் பீடத்தில் வீற்றிருந்து, சீதையை நோக்கிப் பேசுதல்
   | 
| 7638. | பண்களால் கிளவி செய்து, பவளத்தால் அதரம் ஆக்கி,       பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின்                                                      ஈட்ட,       எண்களால் அளவு ஆம் மானக் குணம் தொகுத்து                                               இயற்றினாளை,       கண்களால் அரக்கன் கண்டான், அவளை ஓர் கலக்கம்                                                  காண்பான்.      | 
பண்களால்      கிளவி செய்து  - இசையால் பேச்சைச் செய்து;  அதரம் பவளத்தால்      ஆக்கி   -  உதடுகளைப்  பவளத்தால் ஆக்கி;  பெண்கள் ஆனார்க்குள்        -  பெண்களாய்ப்  பிறந்தவர்களுக்கு  அமைந்த;       நல்ல உறுப்பு எலாம்  பெருக்கின்  ஈட்ட - அழகிய உறுப்புகளை எல்லாம் மிகுதியாகச்        சேர்த்து  உண்டாக்கி;   எண்களால்   அளவு   ஆம் மானக்குணம்      தொகுத்து      இயற்றிளாளை - எண்ணி அளவிட முடியாத பெருமை  மிகு  பண்புகளை ஒன்று       சேர்த்து  உருவாக்கப்பட்டவளான சீதையை;      கண்களால்  அரக்கன்   -  தன் இருபது கண்களாலும் காம       நோக்கோடு இராவணன்;  |