பக்கம் எண் :

500யுத்த காண்டம் 

பேரச்சத்தினால்  மனக்கலக்கம்  நீங்காதனவாய்;  புகுந்திலது அன்றே
- போர்க்களத்தில் மீண்டும் புகாதனவாயின.
 

                                                  (34)
 

8475.

தளப் பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக,
அளப்ப அருந் தேரின் உள்ள ஆயிர கோடி ஆக,
துளக்கம் இல் ஆற்றல் வீரர் பொருத போர்த் தொழிலை
                                         நோக்கி,
அளப்ப அருந் தோளைக் கொட்டி, அஞ்சனை மதலை
                                      ஆர்த்தான்.
 

தளப்  பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் - போர்க்களத்தில்
பொருது   நிற்கும்   பெருமையுடைய  அறுபது  வெள்ளம்  அரக்கர்
சேனையும்;  தலத்தது  ஆக  -  (அழிவுற்று)  நிலத்தின் கண்ணதாய்
மடியவும்; அளப்பருந்தேரின் உள்ள  ஆயிரகோடி ஆக - அளந்து
அறிதற்கிலாத  தேர்களின் மேலுள்ள (அரக்கர்) சேனை ஆயிரங்கோடி
என்னும்  அளவுடையதாய் நிற்கவும்; துளக்கம் இல் ஆற்றல் வீரர் -
மனங்கலங்குதல்   இல்லாத   ஆற்றல்   மிக்க  வீரர்களாகிய  இராம
இலக்குவர்; பொருத போர்த்  தொழிலை நோக்கி - எதிர்த்து நின்ற
போர்ச்  செயலைக்  கண்ணுற்று;  அஞ்சனை  மதலை  - அஞ்சனை
என்பாளது   மகனான  அனுமன்;  அளப்பருந் தோளைக்  கொட்டி
ஆர்த்தான்
 -  அளத்தற்கரிய  (தனது)  தோளைத்  தட்டிக்கொண்டு
பெருமுழக்கம் செய்தான்.
 

                                                  (35)
 

8476.

ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா,
தேரிடைநின்று வீழ்ந்தார் சிலர்; சிலர் படைகள் சிந்தி,
பாரிடை கிழிந்து போகப் பாரித்தார்; பைம் பொன் இஞ்சி
ஊரிடை நின்றுளாரும், உயிரினோடு உதிரம் கான்றார்.
 

ஆர்இடை  அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி - நெருங்குதற்கரிய
போர்  அரங்கில்  அனுமன்  ஆரவாரம்  செய்ததால்  எழுந்த  பெரு
முழக்கமாகிய; அசனிகேளா  -  இடியொலியைக்  கேட்டு;   தேரிடை
நின்று வீழ்ந்தார் சிலர்
- (தேரில் உள்ளாராகிய அரக்கர்களில்) சிலர்
தேரில் நின்றபடியே வீழ்ந்து உயிர்துறந்தார்கள்; சிலர் படைகள்