சிந்தி - சிலர் தம் கையிலுள்ள படைக்கலங்களைக் கீழே சிதறவிட்டு; பாரிடை இழிந்து போகப் பாரித்தார் - தேரிலிருந்தும் கீழே இறங்கித் தப்பி ஓடுதற்குப் பரபரப்புற்றார்கள்; பைம்பொன் இஞ்சி ஊரிடை நின்றுளாரும் - பசிய பொன்மயமான மதிலாற் சூழப் பட்ட (இலங்கையாகிய) ஊரினுள்ளே உள்ள அரக்கர்களும்; உயிரினோடு உதிரம் கான்றார் - உயிருடனே இரத்தத்தைக் கக்கினார்கள். |
(36) |
இந்திரசித்தன் தனியனாகப் பொருதல் |
8477. | ‘அஞ்சினிர், போமின்; இன்று, ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியற்பாலிர் வெஞ் சமம் விளைப்பது என்னோ? நீரும் இவ் வீரரோடு துஞ்சினிர் போலும் அன்றே?’ என்று அவர்ச் சுளித்து நோக்கி,- மஞ்சினும் கரிய மெய்யான்-இருவர்மேல் ஒருவன் வந்தான். |
மஞ்சினும் கரிய மெய்யான் - மேகத்தினும் கருமையான உடலை உடையவனாகிய இந்திரசித்து; ‘இன்று, ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியற்பாலிர் - ‘இப்பொழுது ஓர் ஆரவார ஒலிக்கே மனமழியுந் தன்மையுடைவர்களாய்; அஞ்சினர் - அஞ்சியவர்களே; போமின் - இவ்விடத்தை விட்டு) போய் விடுங்கள்; வெஞ்சமம் விளைப்பது என்னோ - (இத்தகைய அச்சங் கொண்டவர்களாகிய நீங்கள்) வெம்மையுடைய போர்த்தொழிலை நிகழ்த்துதல் எவ்வாறு முடியும்? நீரும் இவ்வீரரோடு துஞ்சினீர் போலும் அன்றே? - (உயிருடன் உள்ள) நீங்களும் (உயிர் நீங்கிப் பிணமாய்க் கிடக்கும்) இவ்வீரர்களுடன் ஒப்ப இறந்தொழிந்தீர்கள் அல்லவா? என்று அவர்ச் சுளித்து நோக்கி - என்று கூறி அவர்களைச் சினந்து பார்த்து; இருவர் மேல் ஒருவன் வந்தான் - (இராம இலக்குவர்) இருவர் மீதும்தான் ஒருவனாகவே பொருதற்கு வந்தான். |
(37) |
8478. | அக் கணத்து, ஆர்த்து மண்டி, ஆயிர கோடித் தேரும் புக்கன-நேமிப் பாட்டில் கிழிந்தன புவனம் என்ன, |