பக்கம் எண் :

502யுத்த காண்டம் 

திக்கிடை நின்ற யானை சிரம் பொதிர் எறிய, சிந்தி
உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட, தேவர் உட்க,
 

அக்கணத்து - அந்தக் கணத்திலேயே; ஆயிர கோடித் தேரும் -
(மேற்கண்டவாறு   இந்திரசித்தன்  சினந்து  கூறிய  அளவில்  அரக்க
வீரர்களுடைய) ஆயிரங்கோடித் தேர்களும்;  திக்கிடை நின்ற யானை
சிரம்  பொதிர் எறிய
 - எண் திசைகளிற் காவலாக நின்ற யானைகள்
தலை  நடுக்கமுற்று அதிரவும்; விசும்பின்  மின்கள்  சிந்தி  உக்கன
உதிர்ந்திட
 -  வானத்திலே உள்ள விண் மீன்கள் சிதறிப் பொடியாய்
உதிரவும்;  தேவர்  உட்க  - தேவர்கள் நெஞ்சங்குலைந்து நடுங்கவும்;
நேமிப்பாட்டில் புவனம்    கிழிந்தன    என்ன   -   சக்கரங்கள்
ஆழப்பதிதலால்    நிலவுலகம்   பிளவுற்றது   என்னும்படி;  ஆர்த்து
மண்டிப்   புக்கன
 -   ஆரவாரித்து  நெருங்கிப்  (போர்க்களத்தில்)
புகுந்தன.
 

                                                  (38)
 

                                        இலக்குவன் வஞ்சினம்
 

கலி விருத்தம்
 

8479.

மாற்றம் ஒன்று.  இளையவன் வளை  வில்  செங்கரத்து
ஏற்றினை வணங்கி நின்று,   இயம்புவான்; ‘“இகல்-
ஆற்றலன் அரவு கொண்டு  அசைப்ப,  ஆர் அமர்
தோற்றனென்” என்று கொண்டு உலகம்   சொல்லுமால்;
 

இளையவன்     -  இளையோனாகிய    இலக்குவன்;  வளைவில்
செங்கரத்து ஏற்றினை வணங்கி  நின்று
 -  வளைந்த  வில்லினைப்
பிடித்த  சிவந்த  கையினை  உடைய  ஆண்சிங்கம்   போல்வானாகிய
இராமனை  வணங்கி  நின்று;   மாற்றம்   ஒன்று  இயம்புவான்  -
(பின்வருமாறு)   ஒரு   வார்த்தையைக்   கூறுவானாயினான்;  “இகல்
ஆற்றலன் அரவு கொண்டு அசைப்ப
 -  ‘போரில்  எதிர்  நிற்கும்
ஆற்றலவனாகிய   இந்திரசித்து   நாகபாசத்தைக்   கொண்டு  இறுகப்
பிணித்தமையால்;  ஆர்   அமர்  தோற்றனென் என்று கொண்டு -
அரிய போரில் யான் தோல்வியுற்றதாகக் கொண்டு; உலகம் சொல்லும்
- (என்னைக் குறித்து) உலகம் பழி கூறும்.
 

                                                  (39)