பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 507

அங்கதன்   ஆர்த்தனன்  அசனி   ஏறு என - (இலக்குவனைச்
சுமந்து செல்லும்) அங்கதன் இடியேற்றினைப் போலப்  போர்  முழக்கம்
செய்தான்;  மங்குல்  நின்று அதிர்ந்தன - (அதனால் விண்ணிடத்தே)
மேகங்கள்   நின்று   அதிர்ந்தன;   வயவன்  தேர் புனை சிங்கமும்
நடுக்குற
- வீரனாகிய இந்திரசித்தன் தேரில்  பூட்டியுள்ள   சிங்கங்கள்
நடுக்கமுறவும்;  கடலும் தள்ளுற - கடல் ஓசை பின்னிடவும்; திருவின்
நாயகன்   சங்கம்   ஒன்று   ஒலித்தது
 - திருமகள்  கேள்வனாகிய
இராமனது சங்கம் ஒன்று முழங்கியது.
 

                                                  (47)
 

8488.

எழு, மழு, சக்கரம், ஈட்டி, தோமரம்,
முழு முரண் தண்டு, வேல், முசுண்டி, மூவிலை,
கழு, அயில் கப்பணம், கவண் கல், கன்னகம்,
விழு மழைக்கு இரட்டி விட்டு, அரக்கர் வீசினார்.
 

எழு,     மழு, சக்கரம், ஈட்டி, தோமரம் - எழுக்கள், மழுக்கள்,
சக்கரங்கள்,  ஈட்டிகள்,  தோமரங்கள்;  முழு  முரண்  தண்டு வேல்,
முசுண்டு,  மூவிலை  கழு
- நிறைந்த வன்மை கொண்ட கதாயுதங்கள்,
வேற்படைகள்,   முசுண்டிகள்,   மூன்று   இலைவடிவமான  கழுக்கள்;
அயில் கப்பணம்,  கவண்கல்,  கன்னகம்  -  கூரிய  கப்பணங்கள்,
கவணில் அமைத்து வீசுங்கற்கள், கன்னகங்கள் ஆகிய   இப்படைகளை;
விழு மழைக்கு இரட்டி விட்டு, அரக்கர் வீசினார் - விண்ணினின்று
சொரியும்  மழையைக்  காட்டிலும்  இரு    மடங்காக அரக்கர்கள் வீசி
எறிந்தார்கள்.
 

                                                  (48)
 

8489.

மீன் எலாம் விண்ணின்நின்று ஒருங்கு வீழ்ந்தென,
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன;
தான் எலாம் துணிந்து போய்த் தகர்ந்து காந்தின;-
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால்.
 

வான்  எலாம்  மண்  எலாம்  மறைய  வந்தன  -  (மழைக்கு
இரட்டிப்பாய்  அரக்கரால்   வீசப்பெற்று) வான் முழுதும் மண் முழுதும்
மறையுமாறு  வந்தனவான  படைக்கலன்கள்; வேனிலான் அனையவன்
பகழி  வெம்மையால்
- வேனிற் காலத்துக்கு உரியவனான மன்மதனை
ஒத்த  பேரழகினை  உடைய   இலக்குவனது அம்புகளின் கடுமையால்;
மீன்  எலாம்  விண்ணின்   நின்று   ஒருங்கு   வீழ்ந்தென
  -
விண்மீன்களெல்லாம் விசும்பினின்றும்   ஒருசேர   வீழ்ந்தன எனும்படி;
தான் எலாம் துணிந்து