பக்கம் எண் :

510யுத்த காண்டம் 

தும்பை   அம்    தொடையலர்   தடக்கை - அழகிய தும்பை
மாலையை அணிந்த அரக்க  வீரர்களுடைய  பெரிய  கைகள்;  தூணி
வாங்கு அம்பொடும் துணிந்தன
  -  அம்பறாத்  தூணியி  னின்றும்
பற்றி   எடுக்கும்   அம்பினோடும் துணிக்கப்பட்டனவாகி; சிலையொடு
அற்றன
-    (பற்றிய)    வில்லுடன்    அறுபட்டன; செங்கண் மீன்
கொம்பொடும்
-  சிவந்த  கண்களை    உடைய மீன்கள் கொம்புடன்;
பரவையில் திரியும் கொட்பு என  -  கடலிடை  அலைந்து  சுற்றும்
தன்மைக்கு ஒப்பாக; செம்பெருங் குருதியின் திகழ்ந்த  -  செந்நிறம்
வாய்ந்த  குருதிப் பெருவெள்ளத்திலே விளங்கித் தோன்றின.
 

கொம்பு     மீன், சுறாமுதலியன. இச்செய்யுள் தற்குறிப்பேற்ற அணி.
“அதிரப்பொருவது    தும்பை”  என்ற  தமிழர்  போர்  முறை  இங்கு
இந்திரசித்து  இலக்குவர்    ஆகியோர்க்கிடையில் வைத்து ஆசிரியரால்
பேசப்  பெறுகின்றது.  “தும்பை    அம்தொடையலர்” என்பது ‘தும்பை
மலர் மாலையை அணிந்தவர்’ என்னும் பொருளதாயிற்று.
 

                                                  (54)
 

8495.

தடிவன கொடுஞ் சரம் தள்ள, தள்ளுற
மடிவன கொடிகளும், குடையும், மற்றவும்,
வெடி படு பெரும் பிணக் களத்தில் மொய்த்தன,
படிவன, ஒத்தன, பறவைப் பான்மையா.
 

தடிவன கொடுஞ்சரம் தள்ள, தள்ளுற   மடிவன  -     வெட்டி
வீழ்த்துந் தன்மையனவாகிய கொடிய அம்புகள்  வெட்டித்  தள்ளுதலால்
தள்ளப்பட்டு வீழ்ந்து கிடப்பனவாகிய; கொடிகளும் குடையும் மற்றவும்
-  கொடிகளும்,  குடைகளும்  ஏனையவும்;  வெடிபடு  பெரும்பிணக்
களத்தில்     மொய்த்தன
   -    அச்சந்தரத்தக்க   பெரும்பிணக்
குவியலையுடைய     போர்க்களத்திலே           நெருங்கியுள்ளவை;
படிவனபான்மையா பறவை  ஒத்தன
 -  (பிணங்களை உண்ணுதற்கு)
பறவைகள் பலவாகப் படியுந் தன்மையினை ஒத்தன.
 

                                                  (55)
 

கலிநிலைத்துறை
 

8496.

சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும்,
குந்து வல் நெடுஞ் சிலை முதல் படைகளும், கொடியும்,
இந்தனங்களாய், இறந்தவர் விழிக் கனல் இலங்க,
வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி.