பல் விலங்கொடு புரவிகள் பூண்ட தேர்ப் பரவை - பல விலங்குகளுடன் குதிரைகள் பூட்டப்பட்ட தேர்த் தொகுதிகள்; வல் விலங்கல் போல் அரக்கர் தம் குழாத்தொடு மடிய - வலிய மலைகளைப் போன்று அரக்கர் கூட்டத்துடன் மடிந்து கிடக்கக் (கண்ட); இராவணன் தோன்றல் - இராவணன் மைந்தனாகிய இந்திரசித்து; வில் இலங்கிய வீரரை நோக்கினன் வெகுண்டான் - (அவற்றை) விற்றொழிலால் அழித்தொழித்த வீரர்களாகிய இராம இலக்குவர் இருவரையும் நோக்கி வெகுண்டவனாகி; விலங்கலன் சொல் சொல்லினன் - (போரிற்) பின்னிடாதவனாய் ஒரு சொல்லைச் சொன்னான். |
(60) |
8501. | ‘இருவிர் என்னொடு பொருதிரோ? அன்றுஎனின், ஏற்ற ஒருவிர் வந்து, உயிர் தருதிரோ? உம் படையோடும் பொருது பொன்றுதல் புரிதிரோ? உறுவது புகலும்; தருவல், இன்று உமக்கு ஏற்றுளது யான்’ எனச் சலித்தான். |
இருவிர் என்னொடு பொருதிரோ? - (இராம இலக்குவராகிய) நீங்கள் இருவரும் (ஒருசேர இயைந்து) என்னுடன் போர் செய்கின்றீர்களா? அன்று எனின் ஏற்ற ஒருவர் வந்து உயிர் தருதிரோ? - அன்றேல் (ஒருவிர் ஒருவிராய்த் தனித்து) வந்து உயிரைத் தருகின்றீர்களா? உம்படையொடும் பொருது பொன்றுதல் புரிதிரோ? - (அல்லது) நுமக்குரிய (வானர) சேனைகளோடும் கூடி (என்னுடன்) போர் செய்து இறந்தொழிலைச் செய்கின்றீர்களா? உறுவது புகலும் - (இவற்றுள் ஆற்றலுக்கும் விருப்பத்திற்கும்) பொருந்துவது ஒன்றைச் சொல்வீராக; தருவல், இன்று உமக்கு ஏற்றுளது யான் எனச் சலித்தான் - நுமக்கு ஏற்புடையதொன்றை இன்று யான் தருகின்றேன் எனச் சிதைந்து கூறினான் (இந்திரசித்து). |
(61) |
இலக்குவன் தன் வஞ்சினம் பற்றிக் கூறுதல் |
8502. | ‘வாளின், திண் சிலைத் தொழிலினின், மல்லினின், மற்றை ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும், அமரில் |