பக்கம் எண் :

514யுத்த காண்டம் 

கோளுற்று, உன்னொடு குறித்து, அமர் செய்து,
                                உயிர் கொள்வான்
சூளுற்றேன்; இது சரதம்’ என்று, இலக்குவன் சொன்னான்.
 

‘வாளின், திண்சிலைத்  தொழிலினின்  மல்லினின்  -  ‘வாள்
கொண்டும்,  உறுதியான  வில்லினாலும்,  மற்போர்  புரிந்தும்; மற்றை
ஆளுற்று எண்ணிய படைக்கலம்  எவற்றினும்
- ஏனைய ஆளுதல்
பொருந்தி  எண்ணப்பட்ட போர்க்கருவிகள் எல்லாவற்றாலும்; அமரில்
கோளுற்று
 - போரில் வலிமையை மேற்கொண்டு; உன்னொடு குறித்து
அமர் செய்து உயிர் கொள்வான் சூளுற்றேன்
- ‘உன் நேர் நின்று,
போர்   புரிந்து  உன்  உயிரைக்  கொள்ளும்  பொருட்டு  வஞ்சினம்
கூறினன்; இது சரதம் என்று, இலக்குவன் சொன்னான் - இது உறுதி
என (இந்திரசித்தனை நோக்கி) இலக்குவன் மறுமொழி கூறினான்.
 

                                                  (62)
 

                                      இந்திரசித்தன் மறுமொழி
 

8503.

‘முன் பிறந்த உன் தம்முனை முறை தவிர்த்து, உனக்குப்
பின்பு இறந்தவன் ஆக்குவென்; பின் பிறந்தோயை
முன்பு இறந்தவன் ஆக்குவென்; இது முடியேனேல்,
என், பிறந்ததனால் பயன் இராவணற்கு?’ என்றான்.
 

முன்   பிறந்த உன்தம் முனை - (உனக்கு) முன்னே பிறந்த உன்
அண்ணனாகிய   இராமனை;    முறை    தவிர்த்து    -    (கால)
முறைமையினின்றும் நீக்கி; உனக்குப் பின்பு இறந்தவன் ஆக்குவென்
-  உனக்குப்  பிறகு இறந்தவனாகச்  செய்வேன்;  பின் பிறந்தோயை
முன்பு இறந்தவன் ஆக்குவென்
- பின் பிறந்த தம்பியாகிய உன்னை
(அண்ணனுக்கு)    முன்னர்    இறந்தவனாகச்    செய்வேன்;   இது
முடியேனேல்  
-   இதனை  நான்  செய்து  முடிக்காமற்  போனால்;
இராவணற்குப்     பிறந்ததனால்   பயன்   என்?  என்றான் -
இராவணனுக்கு மகனாகப்  பிறந்ததனால்  உற்ற  பயன்  யாது?  என
(இலக்குவனை நோக்கி) கூறினான்.
 

                                                  (63)