பக்கம் எண் :

516யுத்த காண்டம் 

கண்டு     இரங்க -  இரு  வில்லாளிகளான நீவீர் இருவருங் கண்டு
வருந்துமாறு; மறுவது    ஆக்கிய   எழுபது   வெள்ளமும்மாள -
(எமக்குப்)   பழியினை   உண்டாக்கிய  எழுபது  வெள்ள  (வானரச்)
சேனையும் இறந்தொழியுமாறு  செய்து;  உலகை  இக்கணத்தின்  ஓர்
வில்லால்      வெறுவிது    ஆக்குவன்
  - உலகினை இவ்வொரு
கணத்திலேயே (எனது)   ஒரு  வில்லினால் வெறுமை உடையதாகுமாறு
அழிப்பேன்.
 

                                                  (65)
 

8506.

‘கும்பகன்னன் என்று ஒருவன், நீர் அமரிடைக் கொன்ற
தம்பி, அல்லன் நான்; இராவணன் மகன்; ஒரு தமியேன்;
எம்பிமாருக்கும், என் சிறு தாதைக்கும், இருவீர்
செம் புணீர்கொடு கடன் கழிப்பேன்’ எனத் தீர்ந்தான்.

 

நீர்     அமரிடைக் கொன்ற - நீர் போரில் (அங்க அங்கமாகச்)
சிதைத்தழித்த;  கும்பகன்னன் என்று - கும்ப கன்னன் என்று பெயர்
படைத்த ஒருவனோ; தம்பி அல்லன் நான் - அல்லது என் தம்பிமார்
போன்றவனோ அல்லேன் நான்; இராவணன் மகன் ஒரு தமியேன் -
இராவணன்  மகன் (யான்) ஆனால் (அவன் மக்களான அக்ககுமாரன்,
அதிகாயன்  என்பார்  போன்று  அல்லேன்) (உம்மைக் கொல்லவல்ல)
ஒப்பற்றுத்   தனித்த  ஆற்றலுடையேன்;  எம்பிமாருக்கும்  என்சிறு
தாதைக்கும்
 -  (உம்மால்  இறந்த)  என்  தம்பியர்க்கும்  என் சிறிய
தந்தையான  கும்பகன்னருக்கும்; இருவீர்  செம்புணீர்  கொடு கடன்
கழிப்பேன்  எனத்  தீர்ந்தான்
- உங்கள் இருவருடைய குருதியாகிய
புனலைக்  கொண்டு  (நீர்க்கடன்களை)  இறுதிக் கடனைச் செய்வேன்
எனக் கூறி முடித்தான்.
 

                                                 (66)
 

                                        இலக்குவன் மாற்றுரை
 

8507.

‘அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தீர்க்கு எலாம்
                                       அடுத்த,
புரக்கும் நன் கடன் செய உளன், வீடணன் போந்தான்;