பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 517

கரக்கும் நுந்தைக்கு நீ செயக் கடவன கடன்கள்,
இரக்கம் உற்று, உனக்கு அவன் செயும்’ என்றனன்,
                                     இளையோன்.
 

அரக்கர்  என்பது ஓர் பெயர் படைத்தீர்க்கு எலாம் - அரக்கர்
என்று  கூறப்படுவதோர் பெயருடையீராகிய நும் இனத்தார்க்கெல்லாம்;
அடுத்த புரக்கும்   நன்கடன்   -  நிகழ்வதாக  உள்ளதும்  (உயிர்)
ஈடேறுவதற்குரியதுமான   சிறந்த  ஈமக்கடன்களை;  செய  வீடணன்
போந்தான்  உளன்
 -  செய்தற்கு  (உன்  சிற்றப்பனாகிய)  வீடணன்
எம்மை அடைந்துள்ளான்;  கரக்கும்  நுந்தைக்கு  நீ  செயக்கடவன
கடன்கள்
 -  (இறந்து)  மறையும்  நும்  தந்தையாகிய இராவணனுக்கு
(மைந்தனாகிய)  நீ  செய்தற்குரிய  (ஈமக்) கடன்களை; இரக்கம் உற்று
உனக்கு  அவன்  செயும்
 -  (நீ  இப்போதே  இறக்கப்போகின்றாய்
ஆதலால்)  பெரிதும்  துயருற்று உனக்கு அவன் செய்யப்போகின்றான்;
என்றனன் இளையோன் - என்று கூறினான் இலக்குவன்.
 

                                                  (67)
 

                         இந்திரசித்தன் - இலக்குவன் கடும் போர்
 

8508.

ஆன    காலையின்,   அயில்   எயிற்று   அரக்கன்
                                நெஞ்சு அழன்றான்,
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய,
பால் நல் வேலையைப் பருகுவ சுடர் முகப் பகழி,
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான்.
 

ஆன காலையில் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்றான்
- (அவ்வாறு இலக்குவன்  கூறிய) அப்பொழுது கூரிய பற்களை உடைய
அரக்கனாகிய   இந்திரசித்து  மனம்  கொதிப்புற்றவனாகி;  பால்  நல்
வேலையைப்   பருகுவ,    சுடர்முகப் பகழி
- நல்ல பால் போலும்
(வானர சேனைகளாகிய) கடலைப்     பருகி     வற்றச்     செய்யும்
ஆற்றலுடையனவாகிய    ஒளி    பொருந்திய   முனையினையுடைய
அம்புகளை; வானும் வையமும்  திசைகளும்  யாவையும் மறைய -
வானிடமும்,   மண்ணிடமும்,   திசைகளும்   மறையும்படி;  சோனை
மாரியின் இருமடி மும்மடி சொரிந்தான்
- விடாத பெரு மழையினும்
இரு மடங்கு மும்மடங்கு (மிகுதியாகப்) பொழிந்தான்.
 

                                                  (68)