| 8511. | பச்சிமத்தினும், மருங்கினும், முகத்தினும், பகழி, உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ, கச்சம் உற்றவன் கைத் துணைக் கடுமையைக் காணா, அச்சம் உற்றனர், கண் புதைத்து ஒடுங்கினர், அமரர். |
கச்சம் - ஆடை. கச்சம் உறுதல் - ஆடையை இறுக உடுத்தல், பச்சிமம் - மேற்றிசை. இங்கு மேற்புறம் என்ற பொருளில் வந்தது. முகம் - முன்புறம். மருங்கு - இரு பக்கம். முற்றுதல் - முதிர்தல், பகைவரை எல்லாப் பக்கங்களிலும் கொடுமையும், கடுமையுமுடைய அம்புகளால் இந்திரசித்து வாட்டினான் என்க. |