| 8512. | மெய்யில் பட்டன பட, படாதன எலாம் விலக்கி, தெய்வப் போர்க் கணைக்கு அத்துணைக்கு அத்துணைச் செலுத்தி, ஐயற்கு ஆங்கு இளங் கோளரி, அறிவு இலான் அறைந்த பொய்யின் போம்படி ஆக்கினன், கடிதினின் புக்கான். | ஐயற்கு ஆங்கு இளங்கோளரி கடிதினின் புக்கான் - தலைவனாகிய இராமனுக்கு இளைய வலிய சிங்கம் போன்றவனாகிய இலக்குவன், விரைந்து போர் செய்ய முற்பட்டவனாகி; மெய்யில் பட்டன பட, படாதன எலாம் விலக்கி - தன் உடலில் பட்டனவாகிய அம்புகள் தைத்துத் தோன்ற, தைக்கப் பெறாதனவாகிய அம்புகள் அனைத்தையும் (தனது அம்புகளால்) தடுத்து நீக்கி; தெய்வப் போர்க் கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி - (இந்திரசித்தன் ஏவிய) தெய்வத்தன்மையுள்ள அம்புகளுக்கு அந்தந்த அம்புகளின் எண்ணிக்கைக்குத் தக அவ்வவற்றைச் செலுத்தி; அறிவிலான் அறைந்த பொய்யின் போம்படி போக்கினான் - (அவ்வம்புகள் அனைத்தையும்) அறிவில்லாதவன் கூறிய பொய்மொழிகளை ஒத்து விரைவில் அழிந்தொழியுமாறு விலக்கிப் போக்கினான். | (72) | | 8513. | பிறகின் நின்றனன் பெருந்தகை, இளவலைப் பிரியான்; ‘அறன் இது அன்று’ என, அரக்கன்மேல் சரம் துரந்து அருளான்; இறவு கண்டிலர் இருவரும், ஒருவரை ஒருவர்; விறகின் வெந்தன, விசும்பிடைச் செறிந்தன விசிகம். | பெருந்தகை - பெருந்தகைமையை உடையவனாகிய இராமன்; இது அறன்று என - (இலக்குவனும், இந்திரசித்தும் தனித்து நின்று பெரும்போரில் தான் இடையே புகுந்து அம்பு தொடுத்தல்) போர் அறம் ஆகாதென எண்ணி; அரக்கன் மேல் சரம் துரந்து அருளான் - அரக்கனாகிய இந்திரசித்தன் மேல் அம்பு தொடுக்காதவனாகி; இளவலைப் பிரியான் பிறகின் நின்றனன் - இலக்குவனைப் பிரியாதவனாய் அவன் பின்புறத்திலேயே வாளா நின்றான்; இருவரும் ஒருவரை ஒருவர் இறவு கண்டிலர் - |
|
|
|