பக்கம் எண் :

522யுத்த காண்டம் 

இடங்கர்ஏறு அன எறுழ் வலி அரக்கன் தேர் ஈர்க்கும்
மடங்கல் ஐ-இரு நூற்றையும் கூற்றின்வாய் மடுத்தான்.
 

படம் கொள்  பாம்பு  அணை  துறந்தவற்கு  இளையவன்  -
படத்தினைக்   கொண்ட  (ஆதிசேடன்  என்ற)  பாம்புப் படுக்கையை
விட்டு   (த்தசரதன் மகனாக) அவதரித்த (திருமாலாகிய) இராமனுடைய
தம்பி இலக்குவன்; வெள்ளத்தின் மேலன வருவன - வெள்ளத்தினும்
அதிகமாக வருவனவாகிய; விடங் கொள் பகழி விலக்கி - விடத்தைக்
தன்னிடம் கொண்ட அம்புகளைத் தடுத்து; எறுழ் வலி அரக்கன் தேர்
-   மிக்க   வலிமையுடைய  அரக்கனாகிய  இந்திரசித்தன்  தேரினை;
இடங்கர்  ஏறு   என  ஈர்க்கும்  -  (குருதி  வெள்ளத்தில்)  ஆண்
முதலையினை  ஒத்து இழுத்துச் செல்லும்; மடங்கல் ஐ-இருநூற்றையும்
கூற்றின்வாய் மடுத்தான்
 -  சிங்கங்கள்  ஆயிரத்தையும்  கூற்றுவன்
வாயுட் புகுமாறு கொன்றொழித்தான்.
 

                                                  (75)
 

8516.

தேர் அழிந்திட, சேமத் தேர் பிறிது இலன், செறிந்த
ஊர் அழிந்திடத் தனி நின்ற கதிரவன் ஒத்தான்;

‘பார் அழிந்தது, குரங்கு எனும் பெயர்’ எனப் பகைத்த

சூர் அழிந்திடத் துரந்தனச் சுடு சரம் சொரிந்தான்.
 

தேர் அழிந்திட சேமத்தேர் பிறி்து இலன் - (தன்) தேர் அழிந்து
பட    (ஏறுதற்கு)    சேமத்தேர்   பிறிதொன்றும்   இல்லாதவனாகிய
இந்திரசித்து;   செறிந்த   ஊர்  அழிந்திடத்  தனிநின்ற கதிரவன்
ஒத்தான்
- நெருங்கியமைந்த ஊர்கோள்  அழிந்து  மறையத்  தனித்து
நின்ற கதிரவனை  ஒத்துத் தோன்றியவனாய்; பார் அழிந்தது, குரங்கு
எனும் பெயர் என
- பூமியின் கண் குரங்கு  என்னும் (இனமேயன்றிப்)
பெயரும்   அழிந்தொழிந்தது   என்னும்   படியாக;   பகைத்த  சூர்
அழிந்திடத் துரந்து அனச் சுடுகரம் சொரிந்தான்
- பகை கொண்டு
எதிர்த்த    சூரபதுமன்   அழியும்   படியாக   (முருகப்பெருமானால்)
ஏவப்பெற்ற   வேற்படையினை  ஒத்த  சுட்டழிக்குந்தன்மை  வாய்ந்த
அம்புகளை (வானரப் படைமீது) பொழிந்தான்.
 

                                                  (76)