பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 523

8517.

அற்ற தேர்மிசை நின்று போர் அங்கதன் அலங்கல்
கொற்றத் தோளினும், இலக்குவன் புயத்தினும், குளித்து
முற்ற, எண் இலா முரண் கணை தூர்த்தனன்; முரண்
                                         போர்,
ஒற்றைச் சங்கு எடுத்து ஊதினான், உலகு எலாம் உலைய.
 

அற்ற    தேர்மிசை நின்று - (இந்திரசித்து) அறுபட்டுச் சிதைந்த
(தன்) தேரின்மேல் நின்று;  போர்  அங்கதன்  அலங்கல் கொற்றத்
தோளினும்
- போர் வலி மிக்க அங்கதனுடைய மாலையணிந்த வெற்றி
பொருந்திய தோளின் மேலும்;   இலக்குவன்   புயத்தினும் குளித்து
முற்ற
- இலக்குவன் தோளிலும் அழுந்தி   நிறையுமாறு;  எண்  இலா
முரண்கணை   தூர்த்தனன்
 -  அளவில்லாத  வலிய  அம்புகளைச்
சொரிந்து நிரப்பினான்; உலகு எலாம் உலைய முரண்போர் ஒற்றைச்
சங்கு  எடுத்து ஊதினான்
 -  உலகங்க  ளெல்லாம் நடுங்கும்படியாக
(தனது) ஒப்பற்ற சங்கினை எடுத்து ஊதினான்.
 

                                                  (77)
 

8518.

சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த
கங்கணத்தொடு கவசமும் மூட்டு அறக் கழல,
வெங் கடுங் கணை ஐ-இரண்டு உரும் என வீசி,
சி்ங்கஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண்எறிந்தான்.
 

சிங்க     ஏறு அன்ன இலக்குவன் - ஆண் சிங்கத்தினை ஒத்த
இலக்குவன்;  சங்கம் ஊதிய தசமுகன் தனிமகன் தரித்த - (வெற்றிச்)
சங்கினை  ஊதிய  இராவணனின்  ஒப்பற்ற  மகனாகிய  இந்திர சித்து
அணிந்திருந்த; கங்கணத்தொடு கவசமும்  மூட்டு அறக் கழல - வீர
கங்கணத்துடன்   (மார்பிலணிந்த)   கவசமும்   மூட்டுவாய்   விண்டு
கழலும்படி;   வெங்கடுங்கணை  ஐ-இரட்ணடு  உரும் என வீசி  -
வெம்மையும்   விரைவும்    வாய்ந்த  அம்புகள்  பத்தினை  இடியேறு
என்னும்படி  எய்து;  சிலையை நாண்  எறிந்தான்  -  தன் வில்லின்
நாணைத் தெறித்துப் பேரொலி எழச் செய்தான்.
 

                                                 (78)