பக்கம் எண் :

524யுத்த காண்டம் 

                        இலக்குவன் வெற்றிக்கு வானரர் ஆர்த்தல்
 

8519.

கண்ட கார் முகில் வண்ணனும், கமலக்கண் கலுழ,
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற,
அண்டம் உண்ட தன் வாயினால், ‘ஆர்மின்’ என்று
                                     அருள,
‘விண்டது அண்டம்’ என்று, உலைந்திட ஆர்த்தனர்
                                      வீரர்.

 

கண்ட  கார் முகில் வண்ணனும் கமலக்கண் கலுழ - (தம்பியின்
போர்   வன்மையைக்)  கண்ட  கருமுகில்  வண்ணனாகிய இராமனும்,
செந்தாமரை   போலும்  கண்கள்  மகிழ்ச்சிக்  கண்ணீர் சிந்த; துண்ட
வெண் பிறை நிலவு  என  முறுவலும்  தோன்ற
 -  துண்டமாகிய
வெள்ளிய   பிறைச்  சந்திரனது நிலவினைப் போன்று (தன் முகத்தில்)
புன்சிரிப்பின் ஒளி  தோன்ற!  அண்டம்  உண்ட  தன்  வாயினால்
‘ஆர்மின்’ என்று அருள
- அண்டத்தை உண்ட தன் வாயினால் (நம்
படை   வீரர்   அனைவரும்)   ‘ஆரவாரம்   செய்வீர்களாக’  எனப்
பணித்தருள;    விண்டது    அண்டம்  என்று  உலைந்திட வீரர்
ஆர்த்தனர்
   -   ‘இவ்வண்டம்     பிளவுற்றது’  என்று  உலகத்தார்
நடுங்கும்படியாக  (வானர)   வீரர்கள் (பேரொலியுண்டாக வாய் விட்டு)
ஆரவாரித்தார்கள்.
 

                                                 (79)
 

             இலக்குவன், அயன்படை தொடப்புக இராமன் தடுத்தல்
 

8520.

கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடைக் கரந்தான்;
அண்ணல், மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி,
பண்ணவற்கு, ‘இவன் பிழைக்குமேல், படுக்கும் நம்
                                      படையை;
எண்ணம்மற்று இலை; அயன் படை தொடுப்பென்’ என்று
                                    இசைத்தான்.
 

கண் இமைப்பதன்  முன்பு  போய் விசும்பிடைக் கரந்தான் -
(அப்பொழுது   இந்திரசித்து)  கண்ணிமைக்கும்  நேரமாகிய  நொடிப்
பொழுதிற்கு  முன்பே  விரைந்து  சென்று  ஆகாயத்தில் மறைந்தான்;
அண்ணல், மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் - (அதனை உணர்ந்த)
பெருமை சான்றவனாகிய இலக்குவன், அவ்விந்திரசித்தின்