புறந்தருதல் - பாதுகாத்தல் ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே (புறம் - 312) என வருதல் காண்க. போது - விரைவாக, பைய - மெதுவாக,செய்தியின் தன்மை கருதிய அச்சத்தால் இவ்வாறு கூறினர் என்க. சேனை முந்நீர், கவிப் பெருங்கடல் - உருவகங்கள்.
|
(75)
|
இராவணன் அழுது அரற்றி நிலத்தில் வீழ்தல்
|
| 7707. | ஊரொடும் பொருந்தித் தோன்றும் ஒளியவன் என்ன, ஒண் பொன் தாரொடும் புனைந்த மௌலி தரையொடும் பொருந்த, தள்ளி, பாரொடும் பொருந்தி நின்ற மராமரம், பணைகளோடும் வேரொடும் பறிந்து, மண்மேல் வீழ்வதே போல, வீழ்ந்தான்.
|
ஊரொடும் பொருந்தித் தோன்றும் ஒளியவன் என்ன - ஊர்கோளோடு பொருந்தி விளங்குகிற கதிரவன் போல; ஒண் பொன்தாரொடும் புனைந்த மௌலி - ஒளி பொருந்திய பொன்னால் ஆகிய மாலைகளினால் அழகு படுத்தப்பட்ட மகுடங்கள்; தரையொடும் பொருந்தத் தள்ளி - பூமியில் சென்று சேரும்படி தள்ளி விட்டுவிட்டு; பாரொடும் பொருந்தி நின்ற மராமரம் - நிலத்தில் பொருந்தி நின்ற மராமரமானது; பணைகளோடும் - தன் வலிய கிளைகளோடு; வேரொடும் பறிந்து - வேரொடு பறித்தலுண்டு; மண்மேல் வீழ்வதே போல வீழ்ந்தான் - நிலத்தின் மேல் வீழ்வது போல (இராவணன்) விழுந்தான்.
|
ஒண் பொன் தாரொடு புனைந்த மௌலிக்கு ஊர்கோளோடு கூடிய கதிரவன் உவமையாயிற்று. இராவணன் தன் இருபது கைகளோடு நிலத்தில் விழுந்தது - மராமரம் வேரொடும் கிளைகளோடும் வீழ்ந்தது போலும் என உவமை கூறினார். ஒளியவன் - கதிரவன்.
|
(76)
|
| 7708. | பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும் உறுவது ஒன்று இன்றி, ஆவி ஒன்றென நினைந்து நின்றான் |