| எறி வரும் செருவில் தம்பி தன்பொருட்டு இறந்தான் என்ன அறிவு அழிந்து, அவசன் ஆகி, அரற்றினன், அண்டம் முற்ற.
|
தாங்கள் பிறந்த நாள் தொடங்கி - தாங்கள் ஒன்றாகப் பிறந்த நாள் தொடங்கி; பிறிவு எனும் பீழை - பிரிவு என்கின்ற துன்பம்; என்றும் உறுவது ஒன்று இன்றி - எப்பொழுதும் நேருதல் (என்ற) ஒன்று இல்லாமையால்; ஆவி ஒன்றென நினைந்து நின்றான் - (இருவருக்கும் உடல் இரண்டு) உயிர் ஒன்று என நினைத்திருந்தவனான இராவணன்; எறி வரும் செருவில் - படைக் கலங்களை எறிந்து செய்யும் போரில்; தம்பி தன் பொருட்டு இறந்தான் என்ன - கும்பகருணன் தனக்காக இறந்தான் என்பதைத் (தூதுவர்) சொல்லக் கேட்டு; அறிவு அழிந்து - அறிவு கெட்டு; அவசன் ஆகி - துக்கம் மிக்கவனாகி; அண்டம் முற்ற அரற்றினன் - அண்டத்தளவு சென்று சேருமாறு பெருங்குரல் எடுத்து அரற்றத் தொடங்கினான்.
|
பிறிவு - பிரிவு, ரகரம் எதுகை நோக்கி றகரமாகத் திரிந்தது. பீழை - துன்பம். ஆவி ஒன்றென நினைந்து நின்றான், உயிர் ஒன்றாகிய செயிர் தீர் கேண்மை. இருதலைப் புள்ளின் ஓருயிரன்ன நிலை என்க.
|
(77)
|
கலி விருத்தம்
|
| 7709. | தம்பியோ! வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும் தும்பியோ! நான்முகத்தோன் சேம்மதலை தோன்றாலோ! நம்பியோ! இந்திரனை நாமப் பொறி துடைத்த எம்பியோ! யான் உன்னை இவ் உரையும் கேட்டேனோ!
|
தம்பியோ - (நீ எனக்குத்) தம்பி மட்டும் தானா? வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும் தும்பியோ - தேவர்களாகிய தாமரைக்காட்டைக் கலக்கி அழிக்கவல்ல மதயானை போன்றவனே; நான்முகத்தோன் சேம் மதலை தோன்றாலோ - நான்கு முகங்களை உடைய பிரமன் மகனாகிய புலத்தியன் மகனான விச்சிராவசுவின் வழித் தோன்றியவனே; நம்பியோ - ஆடவர் திலகனே; இந்திரனை நாமப்பொறி துடைத்த எம்பியோ - |