| உடல்களும், உதிர நீரும், ஒளிர் படைக்கலமும், உற்ற கடல்களும், நெடிய கானும், கார் தவழ் மலையும், கண்டான். | மடல் கொளும் அலங்கல் மார்பன் - இதழ்களை உடைய மலர் மாலையை அணிந்தவனான இலக்குவன்; மிடல் கொளும் பகழி மாரி - வன்மை பொருந்திய அம்பு மழையினை; வானினும் மும்மை வீசி மலைந்திட - மேகத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு சொரிந்து போர் செய்தமையால்; உலைந்து மாண்டார் -உயிர் நீங்கியவராகிய அரக்கரின்; உடல்களும் உதிர நீரும் ஒளிர்படைக்கலமும் - உடல்களும், இரத்தப் புனலும், ஒளி செய்கின்ற போர்க்கருவிகளும் உற்ற - பொருந்திய (அவற்றாலாகிய); கடல்களும் நெடிய கானும் கார்தவழ் மலையும் கண்டான் - கடல்களையும், பரந்த காட்டினையும் மேகந்தவழ்கின்ற மலையையும் (அனுமன்) கண்டான். | (150) | | 8591. | சுழித்து எறி ஊழிக் காலின் துருவினன் தொடரும் தோன்றல், தழிக் கொண்ட குருதி வேலை தாவுவான், ‘தனிப் பேர் அண்டம் கிழித்தது, கிழித்தது’ என்னும் நாண் உரும்ஏறு கேட்டான்; அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான். | சுழித்து எறி ஊழிக்காலின் - (எல்லாப்பொருள்களையும்) சுழற்றி வீசும் யுகமுடிவுக் காலத்தின் பெருங்காற்றுப்போல; துருவினன் தொடரும் தோன்றல் - (இலக்குவனைத்) தேடிச் செல்லும் பெருமை மிக்கவனாகிய அனுமன்; தழிக்கொண்ட குருதி வேலை தாவுவான் - (நாற்புறத்தும்) வளைத்துக் கொண்டுள்ள குருதி நீர்க்கடலைத் தாவிக் கடந்து செல்லுபவன்; தனிப்பேர் அண்டம் கிழித்தது, கிழித்தது என்னும் - தனித்துள்ள இப்பெரிய அண்டத்தைக் கிழித்தது கிழித்தது என்னும்படியாக (எழுந்த)! நாண் உரும் ஏறு கேட்டான் - (இலக்குவனது) வில் நாணின் ஒலியாகிய இடி ஓசையினைக் கேட்டவனாகி; அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் - (எல்லாப் பொருள்களையும்) அழித்தொழிக்கின்ற ஊழி முடிவுக்காலத்தில் ஆரவாரித்து |
|
|
|