பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 567

விரி இருள் பரவைச் சேனை வெள்ளத்து விளைந்தது
                                       ஒன்றும்
தெரிகிலென்;  உரைத்தி’  என்றான்.  சென்னிமேல்
                              கையன் சொல்வான்.
 

ஐய!  அரிகுல  வீரர்  யாண்டையர்? - ‘தலைமை சான்றவனே!
(அனுமனே)  குரக்குக்   குலத்து  வீரர்கள் எவ்விடத்தே உள்ளார்கள்?
அருக்கன்   மைந்தன்   பிரிவு   உனைச் செய்தது எவ்வாறு? -
சூரியன்  மகனான  சுக்ரீவன்  உன்னை  விட்டுப்  பிரிந்து  சென்றது
எவ்வாறு? அங்கதன் பெயர்ந்தது எங்கே?  -  அங்கதன்  சென்றது
எங்கே?  விரிஇருள்  பரவைச்  சேனை  வெள்ளத்து  -  பரந்த
இருட்கடலில் கலந்த சேனை  வெள்ளத்தில்;  விளைந்தது  ஒன்றும்
தெரிகிலென் உரைத்தி என்றான்
 -  நிகழ்ந்த  செயல்  எதையும்
அறிந்திலேன்,  (இவற்றை விளங்கச்) சொல்வாயாக என (இலக்குவன்)
வினவினான்; சென்னிமேல் கையன்  சொல்வான்  -  (அது கேட்ட
அனுமன்) தலைமேல் குவித்த கையனாய் (ப்பின் வருமாறு மறுமொழி)
கூறுவானாயினன்.
 

                                                (153)
 

                                         அனுமன் மறுமொழி
 

8594.‘போயினார் போயவாறும், போயினது அன்றிப் போரில்
ஆயினார் ஆயது ஒன்றும், அறிந்திலென், ஐய! யாரும்
மேயினார் மேய போதே தெரிவது, விளைந்தது’ என்றான்-
தாயினான் வேலையோடும் அயிந்திரப் பரவைதன்னை.
 

வேலையோடும் அயிந்திரப்  பரவைதன்னைத்  தாயினான்  -
கடலுடன்    ஐந்திரவியாகரணமாகிய    கடலையும்   கடந்தவனாகிய
அனுமன்; ஐய!  போயினார் போயவாறும்  போயினது  அன்றி -
(இலக்குவனை  நோக்கி)  தலைவனை!  போர்மேற்  சென்றவர்களாகிய
அவர்கள்    (தம்மை    எதிர்த்த    பகைவர்களைத்    தொடர்ந்து)
போயினதைத்  தவிர;  போரில்   ஆயினார்   ஆயது   ஒன்றும்
அறிந்திலென்
 - போரில் ஈடுபட்டோராகிய அவர்களிடையே நிகழ்ந்த
செய்தி   எதுவும்   அறியப்    பெற்றிலேன்;  யாரும்   மேயினார்
மேயபோதே
- (போரில்) பொருந்தியவர்களாகிய அவர்கள்