பக்கம் எண் :

568யுத்த காண்டம் 

யாவரும்    (இங்கு மீண்டு) வந்தபோது தான்; விளைந்தது தெரிவது’
என்றான்
- (அங்கு) நிகழ்ந்தவற்றை அறிதல் கூடும்’ என்று கூறினான்.
 
 

                                                (154)
 

8595.‘மந்திரம் உளதால், ஐய! உணர்வுறும் மாலைத்து; அஃது உன்
சிந்தையின் உணர்ந்து, செய்யற்பாற்று எனின், செய்தி;
                                          தெவ்வர்
தந்திரம்அதனைத் தெய்வப் படையினால் சமைப்பின்
                                         அல்லால்,
எந்தை! நின் அடியர் யாரும் எய்தலர், நின்னை’ என்றான்.
 

ஐய!,  உணர்வுறும்  மாலைத்து  மந்திரம்  உளது  - ‘ஐயனே!
(பகைவரது மாயையாற்  பொருந்திய  மயக்கம்  நீங்கி) நல்லுணர்வினை
அடையச் செய்யும் இயல்பினதாகிய உபாயம் ஒன்று  உள்ளது;  அஃது
உன் சிந்தையின் உணர்ந்து
- அதனை  நின்  மனத்தின்  கண்ணே
ஆராய்ந்து தெளிந்து; செய்யற்பாற்று எனின், செய்தி - (இப்பொழுது)
செய்யத்தக்கதாயின்   அதனைச்   செய்வாயாக;  தெவ்வர்  தந்திரம்
இதனை
  -  பகைவருடைய  சூழ்ச்சித்திறமாகிய  இம்மயக்கத்தினை;
தெய்வப்படையினால்  சமைப்பின்  அல்லால்  -  தெய்வத்தன்மை
வாய்ந்த  அத்திரங்களால்  செய்தால்  அன்றி;  எந்தை! நின் அடியர்
யாரும்  எய்தலர்   நின்னை’   என்றான்
  -   எந்தையே   நின்
அடித்தொண்டராகிய   வானரவீரர்கள்   எவரும்   (மயக்கந்தெளிந்து)
நின்னை  வந்தடையும்  ஆற்றலுடையவர்  அல்லர்’  என  (அனுமன்
இலக்குவனுக்கு) கூறினான்.
 
 

                                               (155)
 
 

                            இலக்குவன் சிவன்படை தொடுத்தல்
 

8596.‘அன்னது புரிவென்’ என்னா, ஆயிர நாமத்து அண்ணல்-
தன்னையே வணங்கி வாழ்த்தி, சரங்களைத் தெரிந்து தாங்கி,
பொன் மலை வில்லினான்தன் படைக்கலம் பொருந்தப் பற்றி,
மின் எயிற்று அரக்கர்தம்மேல் ஏவினான்-வில்லின்
                                        செல்வன்.