பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 569

வில்லின்  செல்வன்  -  விற்றொழில் வன்மையாகிய செல்வத்தை
உடைய  இலக்குவன்; அன்னது புரிவென்  என்னா  -  (நீ  கூறிய)
“அதனையே செய்வேன்” என (அனுமனுக்குக்) கூறி; ஆயிர நாமத்து
அண்ணல்   தன்னையே  வணங்கி  வாழ்த்தி
   -    ஆயிரம்
திருப்பெயர்களை   உடையவனாகிய   இறைவனாம்   இராமபிரானை
வணங்கி,  வாழ்த்தி;  சரங்களைத் தெரிந்துதாங்கி  -  அம்புகளைத்
தேர்ந்தெடுத்து;   பொன்மலை   வில்லினான்  தன்  படைக்கலம்
பொருந்தப் பற்றி
 -  பொன்மயமான  மேருமலையை   வில்லாகக்
கொண்ட சிவபெருமானது படைக்கலத்தினைப் பொருந்தும் படி செய்து;
மின்னெயிற்று அரக்கர் தம்மேல் ஏவினான்  -  மின்னலை  ஒத்து
விளங்கும்   ஒளி  பொருந்திய  பற்களை  உடைய  அரக்கரின்  மீது
செலுத்தினான்.
 
 

ஆயிரம்   நாமத்து   அண்ணல்   -  திருமாலின்  அவதாரமான
இராமபிரான்.   பொன்மலை   வில்லினான்  -  மேருவை  வில்லாகத்
தாங்கிய  சிவபெருமான்,  வில்லின் செல்வன் - இலக்குவன். அனுமன்
குறித்தபடி   செய்ய   முடிவுசெய்த   இலக்குவன்,   இராமபிரானைத்
தியானித்து    அம்புகளைத்    தேர்ந்தெடுத்து    அதில்    பாசுபத
அத்திரத்தினைப்  பொருந்தச்  செய்து  அரக்கரின்  மேல் ஏவினான்
என்பதாம்.  சைவ  -  வைணவ  வேறுபாடு உயர்ந்தோரிடம் இல்லை
என்ற குறிப்பு இப்பாடலில் அமைந்துள்ளமை உணரத் தக்கது.
 
 

                                                (156)
 

8597.முக்கணான் படையை மூட்டி விடுதலும், மூங்கில் காட்டில்
புக்கது, ஓர் ஊழித் தீயின், புறத்தின் ஓர் உருவும் போகாது
அக் கணத்து எரித்து வீழ்ந்தது, அரக்கர்தம் சேனை; ஆழித்
திக்கு எலாம் இருளும் தீர்ந்த; தேவரும் மயக்கம் தீர்ந்தார்.

 

முக்கணான்   படையை   மூட்டி  விடுதலும்  -  (இலக்குவன்)
சிவபெருமானது  படைக்கலத்தைத்   தொடுத்துச்  செலுத்திய அளவில்;
மூங்கில் காட்டில் புக்கது  ஓர் ஊழித்  தீயின்  - மூங்கில் காட்டில்
பற்றியதொரு  ஊழிக்காலத்தீயினைப் போன்று; புறத்தின் ஓர் உருவும்
போகாது
  -   புறத்தே   ஒரு   பொருளும்  தப்பிப்  போகாதவாறு;
அரக்கர்தம்  சேனை  அக்கணத்து  எரிந்து  வீழ்ந்தது - அரக்கர்
சேனை அப்பொழுதே எரிந்து வீ்ழ்ந்தது;