| 7713. | ‘மாண்டனவாம், சூலமும், சக்கரமும், வச்சிரமும்; தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம்; தெறித்து, மீண்டனவாம்; மானிடவன் மெல் அம்பு மெய் உருவ, நீண்டனவாம், தாம் இன்னம் நின்றாராம், தோள் நோக்கி! | மாண்டனவாம் - மாட்சிமைப்பட்டதாகிய; சூலமும் - (சிவனது) சூலாயுதமும்; சக்கரமும் - (திருமாலுக்கு உரிய) சக்கராயுதமும்; வச்சிரமும் - (இந்திரனது) வச்சிராயுதமும்; தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம் - (முன்பு) உன்மீது தீண்டினவாகி ஒன்றும் செய்யமுடியாது செயல் அற்றுத்; தெறித்து மீண்டனவாம் - தெறித்து (அப்பால்) போய்விட்டன; மானிடவன் மெல் அம்பு - (இப்போதே) மனிதன் எய்த மென்மையான அம்புகள்; மேய் உருவ நீண்டனவாம் - (உன்) உடம்பைத் துளைக்கும்படி நீண்டு (வலியொடு) வந்தனவாம்; தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி - இந்நிலையில் இராவணன் இன்னும்கூடத் தன்தோளைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். (என்னே இது) | மெல்லம்பு - மானிடன் விடும் அம்பின் வலிமைக் குறைவையும் இழிவையும் சுட்டி நின்றது. மாண்டனவாம் - மழுங்கின எனினும் அமையும். தாம் - இராவணன் தன்னைப் படர்க்கையாகக் கூறியது. | (82) | | 7714. | ‘நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும், இந் நொய்து இலங்கை போக்கு அறவும், மாதுலனார் பொன்றவும், என் பின் பிறந்தாள் மூக்கு அறவும், வாழ்ந்தேன்-ஒருத்தி முலைக் கிடந்த ஏக்கறவால்; இன்னம் இரேனோ, உனை இழந்தும்? | எம்பியர்கள் நோக்கு அறவும் மாளவும் - என் தம்பியர்கள் பார்ப்பதற்குக் கூட இல்லாமல் இறந்து படவும்; இ இலங்கை நொய்து போக்கு அறவும் - இந்த இலங்கை எளிமையாக (பகைவர் கையில்) பட்டு விடவும்; மாதுலனார் பொன்றவும் - மாமனாகிய மாரீசன் இறக்கவும்; என்பின் பிறந்தாள் மூக்கு அறவும் - என்பின் பிறந்தவளாகிய (சூர்ப்பநகை) மூக்கை இழக்கவும்,; ஒருத்தி முலைக் |
|
|
|