பக்கம் எண் :

570யுத்த காண்டம் 

ஆழித்திக்கெலாம்  இருளும் தீர்ந்த- கடலை எல்லையாக உடைய
திசைகள்  அனைத்தும்  இருள்  நீங்கப்பெற்றன;  தேவரும் மயக்கம்
தீர்ந்தார்
- தேவர்களும் திகைப்பு நீங்கப்பெற்றனர்.
 
 

                                                (157)
 

8598.தேவர்தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா,
மா பெருந் தேரில் நின்ற மகோதரன் மறையப் போனான்;
யாவரும் இரிந்தார் எல்லாம், இன மழை கழிய ஆர்த்து,
கோ இளங் களிற்றை வந்து கூடினார்; ஆடல் கொண்டார்.

 

தேவர்தம்  படையை  விட்டான் -  (இலக்குவன்) தேவர்க்குரிய
(திறல்மிக்க   பாசுபதாத்திரத்தை)  படைக்கலத்தை  ஏவினான்; என்பது
சிந்தை செய்யா
 -  என்பதனை மனத்தில் எண்ணி; மாபெருந்தேரில்
நின்ற   மகோதரன்  
  -    மிகப்பெருந்தேரில்    (அனைத்தையும்
பார்த்துக்கொண்டு)  நின்றவனாகிய  மகோதரன்; மறையப் போனான் -
(தான்ஏவிய)   மாயை  மறைந்தொழியத்  தானும் அவ்விடத்தைவிட்டுப்
போயினன்; யாவரும் இரிந்தார் எல்லாம் - (ஒருவரை விட்டு ஒருவர்
பிரிந்த   நிலையில்  போராற்றிய) வானரத்தலைவர் யாவரும் (போரில்)
நிலைகுலைந்து  ஓடிய  எல்லோருடனும்;  இனமழை கழிய ஆர்த்து -
மேகக்  கூட்டங்கள் பின்னிடுமாறு ஆரவாரித்து; கோ இளங்களிற்றை -
தலைமைசான்ற  இளங்களிறு  போன்றவனாகிய  இலக்குவனை; வந்து
கூடினார்   ஆடல்  கொண்டார்
-  வந்து  சூழ்ந்தவராய் (மகிழ்ச்சி
மிகுதியால்) கூத்தாடத் தொடங்கினார்.
 
 

                                               (158)
 

8599.யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு, உவகை ஏற,
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான்;
காவல் போர்க் குரங்கின் சேனைக் கடல் எனக் கலந்து
                                          புல்ல,
பூ வர்க்கம் இமையோர் தூவ; பொலிந்தனன்; தூதர்
                                       போனார்.