பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 571

தேவர்க்கும் தேவன் தம்பி - தேவாதி தேவனாகிய இராமபிரானின்
தம்பியாகிய  இலக்குவன்;   யாவர்க்கும்   தீது   இலாமை  -  (தன்
சேனையிலுள்ளார்)    யாவர்க்கும்    எவ்வித   இடையூறும்   நேராத
தன்மையினை;  கண்டு  கண்டு  உவகை  ஏற  -  விடாமல்  பார்த்து
மகிழ்ச்சி மிகக் கொண்டவனாய்; திருமனத்து ஐயம் தீர்ந்தான் - (தான்
முன்புகொண்ட)  சந்தேகம்  தீர்ந்தவனாகி;  காவல்  போர்க் குரங்கின்
சேனை  
- (தனது) காவலிற் போர் புரியும் குரங்குப்படை; கடல் எனக்
கலந்து  புல்ல  
-  கடல்  போலத்திரண்டு  (தன்னை) நெருங்கி நிற்க;
இமையோர் பூவர்க்கம்  தூவ  -  வானவர்  மலர்வகைகளைத்  தூவ;
பொலிந்தனன் -  விளங்கி  நின்றான்;  தூதர்  போனார் - தூதர்கள்
(இச்செய்தியினைக் கூற இராவணனிடம்) சென்றனர்.
 
 

                                                 (159)
 

            தூதர் இராவணனுக்கும் இந்திரசித்திற்கும் செய்தி கூறுதல்
 

8600.

இலங்கையர் கோனை எய்தி, எய்தியது உரைத்தார், ‘நீவிர்
விலங்கினிர் போலும்; வெள்ளம் நூற்றை ஓர் வில்லின்,
                                         வேழக்
குலங்களினோடும் கொல்லக் கூடுமோ?’ என்ன, ‘கொன்றை
அலங்கலான் படையின்’ என்றார. ‘அன்னதேல், ஆகும்’
                                        என்றான்.
 

இலங்கையர் கோனை  எய்தி - (சென்ற தூதர்கள்)  இலங்கையர்
வேந்தனாகிய  இராவணனை  அடைந்து;  எய்தியது  உரைத்தார் -
(போர்க்களத்தில்)  நிகழ்ந்த  செய்தியை  எடுத்துரைத்தார்கள்;  நீவிர்
விலங்கினர் போலும்
-  (அது  கேட்ட  இராவணன் அத்தூதர்களை
நோக்கி) நீங்கள்  (அஞ்சி)  விலகித்  திரும்பினீர்  போலும்;  வேழக்
குலங்களினோடும்
 -  யானைக் கூட்டத்துடன்; வெள்ளம் நூற்றை -
நூறு வெள்ளம் சேனைகளையும்; ஓர் வில்லின் கொல்லக் கூடுமோ -
ஒரு வில்லாலே கொன்றொழித்தல கூடுமோ?; என்ன - என்று கேட்க;
கொன்றை அலங்கலான் படையின் என்றார்  -  கொன்றை மாலை
அணிந்த   சிவபெருமானின்  படைக்கலமாகிய  பாசுபதாத்திரத்தினால்
(இவ்வாறு  நம்  சேனை  அழிவுற்றது)  எனத் தூதர் விடை கூறினார்;
‘அன்னதேல், ஆகும்’ என்றான் - (அதனைக் கேட்ட