பக்கம் எண் :

574யுத்த காண்டம் 

கரிய  வெள்ளாட்டு  இருங்குருதி -  கொம்பு, பல் ஆகியவற்றுடன்
கரிய  வெள்ளாட்டினது  பெருகிய  குருதியையும்;  வெம்பு வெந்தசை
முறையின்   இட்டு   
-   வேகக்கூடிய   வெவ்விய   தசையினையும்
முறையாகப் பெய்து; எண்ணெயால் வேட்டான் - எள்ளின் நெய்யைச்
சொரிந்து ஓமம் செய்தான்.
 
 

காரிஎள்   - கரிய எள்; கரிய வெள்ளாடு. காராட்டை - வெள்ளாடு
என்பது  மங்கல  வழக்கு.  இருங்குருதி - நிறைந்து பெருகிய இரத்தம்.
நற்றேவதைக்குப்    பூவும்,    புனலும்,     பூசனைக்காம்பொருளாகத்
துர்தேவதைக்கு  உயிர்ப்பலி  கொடுத்து  உலகோர் வணங்குதல் போல
அரக்கனிடம்  இருந்த  பிரம்மாத்திரத்திற்கு உயிர்ப்பலி இட்டு அதன்
அதிதேவதையை வழிபட்டான் என்பதாம்.
 
 

தீயவை      தீமைபயத்தல்    ஒருதலை;   இவன்   வேள்வியும்
அத்தகையதே.  கருவியென்பது கருத்தாவின் கருத்தின்படி இயங்குவது.
 
 

                                               (163)
 

              பிரமாத்திரத்துடன் இந்திரசித்து வானில் மறைந்திடுதல்
 

8604.வலம் சுழித்து வந்து எழுந்து எரி, நறு வெறி வயங்கி,
நலம் சுரந்தன பெருங் குறி முறைமையின் நல்க,
குலம் சுரந்து எழு கொடுமையான், முறையினில் கொண்டே,
‘நிலம் சுரந்து எழு வென்றி’ என்று உம்பரில் நிமிர்ந்தான்.
 

எரி  நறுவெறி  வயங்கி  வலஞ்  சுழித்து  வந்து  எழுந்து -
(வேள்வியின்)  தீயானது  நறுமணத்துடன்  வலது  புறமாகச்  சுழன்று
வந்து  மேலெழுந்து;  நலம்  சுரந்தன  பெருங்குறி  முறைமையின்
நல்க
-  நன்மையை   விளைவிப்பனவாகிய   பெரிய  அறிகுறிகளை
முறைப்படி புலப்படுத்திக்காட்ட;  குலம்  சுரந்து எழு கொடுமையான்
முறையினில் கொண்டே
 -  (அரக்கர்)   குலத்தில்   ஊற்றெடுத்துப்
பெருகும் கொடுமைகட்கெல்லாம்  நிலைக்களமான இந்திரசித்து (தீவலம்
சுழித்த)   அம்முறைமையினை  ஆதரவாகக் கொண்டு; ‘நிலம் சுரந்து
எழுவென்றி’  என்று  உம்பரில்  நிமிர்ந்தான்
 -  ‘செருநிலத்தில்
வெற்றி  பெருகித் தோன்றும்’   என்று  (எண்ணயிவனாய்)  விசும்பின்
மேல்  உயர்ந்து சென்றான்.