யாகத்தீ வலமாகச் சுழன்று எழுவது நற்சகுனமாகக் கொள்ளப்பட்டது. எனவே, இந்திரசித்து தனக்கு வெற்றி கிடைப்பது உறுதி என எண்ணியவனாய் வானில் உயர்ந்தான் என்பதாம். |
அரக்கர் குலமாகிய ஊற்றுச் சுரந்த கொடுமையின் வடிவமாக இந்திரசித்து வர்ணிக்கப் பெறுகின்றான். நிலம் - போர்க்களம். |
(164) |
| 8605. | விசும்பு போயினன், மாயையின் பெருமையான்; மேலைப் பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா, அசும்பு விண்ணிடை அடங்கினன், முனிவரும் அறியாத் தசும்பு நுண் நெடுங் கோளொடு காலமும் சார. |
மாயையின் பெருமையான்- (யாவரையும் மயக்குந் தன்மையாகிய) மாயத்தின் மிகுதியை உடையவனாகிய இந்திரசித்து; தசும்பு நுண் நெடுங்கோளொடு காலமும் சார - (வானப்பெருவெளியில்) அசையுந்தன்மையனவாகிய நுண்ணிய நீண்ட கோள்களுடன் (வெற்றியைத் தரும்) காலமும் சேர; விசும்பு போயினன் - ஆகாயத்தில் சென்றவனாகி; மேலைப் பசும்பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா - மேலேயுள்ள பசிய பொன்மயமான துறக்க உலகத்தவராகிய தேவர்களுடைய கண்களும் உள்ளமும் (ஊடுருவிச்) செல்ல முடியாத; அசும்பு விண்ணிடை அடங்கினன் - நீர்த்திவலையை உடைய வானத்திடையிலே நுண்ணுருவுடையவனாய் ஒடுங்கினான்; முனிவரும் அறியார் - (அவனது இருப்பினை) முனிவர்களும் அறிய முடியாதவராயினர். |
(165) |
மகோதரன் இந்திரவடிவுடன் வந்து பொருதல் |
| 8606. | அனையன் நின்றனன்; அவ் வழி, மகோதரன் அறிந்து, ஓர் வினையம் எண்ணினன், இந்திர வேடத்தை மேவி, துனை வலத்து அயிராவதக் களிற்றின்மேல் தோன்றி, முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான். |
அனையன் நின்றனன் - அத்தன்மையனாகிய இந்திரசித்து (வானகத்து உருக்கரந்து) நின்றான்; அவ்வழி மகோதரன் அறிந்து |