பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 577

வெருக்கொளப்  பெருங்  கவிப்படை  குலைந்தது  விலங்கி  -
(அதுகண்டு)  பெரிய  வானர சேனை அச்சங்கொண்டு நிலை கெட்டுப்
பின் வாங்கியது.
 
 

                                                (167)
 

8608.

‘கோடு நான்குடைப் பால் நிறக் களிற்றின்மேல் கொண்டான்
ஆடல் இந்திரன்; அல்லவர் யாவரும் அமரர்,
சேடர், சிந்தனை முனிவர்கள்; அமர் பொரச் சீறி,
ஊடு வந்து உற்றது என்கொலோ, நிபம்?’ என உலைந்தார்.

 

கோடு நான்குடைப்பால் நிறக் களிற்றின் மேல் கொண்டான் -
நான்கு  தந்தங்களை உடைய பால் போன்ற வெண்ணிற யானை மேல்
ஏறி வருபவன்; ஆடல்  இந்திரன்;  அல்லவர்  யாவரும்  அமரர் -
வலிமை  வாய்ந்த  இந்திரன்  (அவனைச்  சூழ்ந்துள்ள)  ஏனையோர்
தேவர்கள்; சேடர் சிந்தனை முனிவர்கள் - எஞ்சியோர் இறைவனை
எண்ணியிருக்கின்ற முனிவர்கள்;  அமர்  பொரச்  சீறி  - இங்ஙனம்
வானுலகவர்  (நம்மீது  பகையுடன்) போர் செய்தற்குச் சீற்றங்கொண்டு;
ஊடு வந்து உற்றது  என்கொலோ  நிபம்?  என  உலைந்தார் -
(இப்போர்க்களத்தின்) இடையே வந்து சேர்ந்தது எக்காரணத்தினாலோ’
என (வானரர் திகைப்புற்று) வருந்தினர்.
 
 

                                                 (168)
 

இலக்குவன், அனுமனை முனிவர் முதலியோர் பொரும் காரணம் வினவல்
 

8609.

அனுமன் வாள் முகம் நோக்கினன், ஆழியை அகற்றித்
தனு வலம் கொண்ட தாமரைக் கண்ணவன்தம்பி,
‘முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த, யாம் முயன்ற
துனி இது என்கொலோ? சொல்லுதி, விரைந்து’ எனச்
                                    சொன்னான்.
 

ஆழியை அகற்றித் தனுவலம் கொண்ட - சக்கரப்படையை நீக்கி
வில்லை வலக்கையிற்  கொண்ட;  தாமரைக்  கண்ணவன்  தம்பி  -
செந்தாமரை   மலர்   போலும்  கண்களை  உடைய  இராமபிரானின்
தம்பியாகிய     இலக்குவன்;     அனுமன்     வாள்     முகம்