பக்கம் எண் :

578யுத்த காண்டம் 

நோக்கினன்     -    அனுமனது    ஒளிபொருந்திய     முகத்தை
நோக்கியவனாய்;  முனிவர் வானவர்   முனிந்து  வந்து  எய்த -
முனிவர்களும்   தேவர்களும்  சினந்து  ‘(நம்முடன்   போர்  செய்ய)
வருமாறு; யாம் முயன்ற துனி  இது  என்கொலோ  - நாம் செய்த
வெறுக்கத்தக்க குற்றம்   யாதோ?   சொல்லுதி   உணர்ந்து  எனச்
சொன்னான்
- ஆராய்ந்து கூறுவாயாக” என்று கூறினான்.
 

                                                (169)
 

இந்திரசித்தன்  பிரமாத்திரத்தை  இலக்குவன் மேல் விடுதலும் அதன்
                                             விளைவுகளும்

 

8610.

இன்ன காலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான்,
முன்னை நான்முகன் படைக்கலம்; இமைப்பதன் முன்னம்,
பொன்னின் மால் வரைச் குரீஇஇனம் மொய்ப்பது போல,
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க் கணை பாய்ந்த.
 

இன்ன  காலையின் - இவ்வாறு (அனுமனை நோக்கி இலக்குவன்)
வினவும்   நேரத்தில்;   முன்னை   நான்   முகன்  படைக்கலம் -
(இந்திரசித்து)   காலத்தால்  முற்பட்ட  முதியவனாகிய  பிரமதேவனது
படைக்கலத்தை;  இமைப்பதன் முன்னம் - ஓர் இமைப்பொழுதிற்குள்;
இலக்குவன் மேனி மேல் எய்தான்  -  இலக்குவனது உடலின் மீது
செலுத்தினான்; பொன்னின் மால் வரைக்குரீஇ  இனம் மொய்ப்பது
போல
- பொன் மயமான பெரிய மலையின் மீது குருவிக் கூட்டங்கள்
மொய்ப்பதைப் போன்று; பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க்கணை
பாய்ந்த  
 -   சொல்லும்  தன்மைய  வல்லாத  ஒளிமிக்க  அம்புகள்
(இலக்குவனது மேனியிற்) பாய்ந்து தைத்தன.
 
 

                                                (170)
 

8611.
 

கோடி கோடி நூறாயிரம் சுடர்க் கணைக் குழாங்கள்
மூடி மேனியை முற்றுறச் சுற்றின மூழ்க,
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன், உணர்வு புக்கு ஒடுங்க,
ஆடல் மாக் கரி சேவகம் அமைந்தென, அயர்ந்தான்.
 

கோடி, கோடி நூறாயிரம் சுடர்க் கணைக் குழாங்கள் - கோடி
கோடி   நூறாயிரம்   என்னும்  தொகையினவாகிய   ஒளி  படைத்த